முதல்வரின் தனிச் செயலராக ஜெகதீஷ் பழனிசாமி நியமனம்!அமோனியா கசிவு: கைதான 3 பேருக்கும் 15 நாள்கள் நீதிமன்றக் காவல் - நீதிமன்றம் உத்தரவுஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு!தூய்மைப் பணி தனியார்மயமாகிறது? முயற்சியை கைவிட தமிழக அரசுக்கு சிபிஎம் கோரிக்கை!விளையாட்டு விடுதி மாணவர்களுக்கான உணவுப்படி உயர்வு!தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஜான் பாண்டியன் விலகல்!இன்னும் எத்தனை போக்சோ நீதிமன்றங்கள் தேவை? அறிக்கை கேட்கும் உயர் நீதிமன்றம்!பொறியியல் பணி: விழுப்புரம் வழியாக செல்லும் ரயில்கள் நிறுத்தி வைத்து இயக்கம்!மாநகர காவல் ஆணையர்கள் உள்பட 14 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்! லக்னௌ பயிற்சி நிறுவன தீ விபத்து: 14 பேர் பலிசபரிமலை ஐயப்பன் கோயிலிலும் செய்யறிவு! கூட்டத்தைக் கட்டுப்படுத்தும்!அமோனியா கசிவு: ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் - திருமாவளவன் கோரிக்கைவிஜய் பிறந்தநாள்: இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிய தவெக!அமோனியா வாயு கசிவு! பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன்
/

வடிவேலு பிறவிக் கலைஞன்: விஜயகாந்த்

நடிகர் வடிவேலு குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியதாக பிரேமலதா விஜயதாந்த் தகவல் ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

News image
Updated On :27 ஆகஸ்ட் 2023, 1:53 am IST

நடிகர் வடிவேலுக்கும் தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கும் சில ஆண்டுகளுக்கு முன் பிரச்னை ஏற்பட்டது. இதனால், தேமுதிக நிர்வாகிகள் சிலருக்கும் வடிவேலுக்கும் இடையே வாக்குவாதங்கள் நடைபெற்றன. 

ஆத்திரமடைந்த வடிவேலு, 2011 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரத்தை மேற்கொண்டு பல இடங்களில் விஜயகாந்த்தைக் கடுமையாக விமர்சித்தார். 

அத்தேர்தலில் திமுக தோல்வியடைந்தது. தொடர்ந்து அரசியல் காரணங்களால், வடிவேலுவை தயாரிப்பாளர்கள் அணுகாமல் இருந்தனர். இதனால், அவரின் சினிமா வாழ்வில் மிகப்பெரிய சறுக்கல் ஏற்பட்டது. தற்போது, மீண்டும் தீவிரமாக நடிக்க துவங்கியிருக்கிறார். 

இந்நிலையில், விஜயகாந்த்தின் மனைவியும் தேமுதிக பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்த் ஒரு நேர்காணலில், “ கேப்டன் தன்னைப் பற்றி தவறாகப் பேசுபவர்களைப் பற்றி கவலைப்படமாட்டார். மனதிற்குள் அந்த வலி இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல் இயல்பாகவே இருப்பார். அவரைப் பற்றி  வடிவேலு நிறைய பேசியிருக்கிறார். ஆனால், அதற்காக எந்த மன்னிப்பும் கேட்கவில்லை. ஆனால், வடிவேலு நடிக்காத காலத்தில் கேப்டன் என்னிடம் ’ஏன் வடிவேலு நடிப்பதில்லை. அவர் ஒரு பிறவிக்கலைஞர். அவரைத் தமிழ் சினிமா இழக்கக்கூடாது. தயாரிப்பாளர்கள் அவரை கைவிடக்கூடாது’ என்றதுடன் தனக்குத் தெரிந்த சிலருக்கு அழைத்து வடிவேலுவுக்கு வாய்ப்பு கொடுக்கச் சொன்னார்” எனக் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.