கைது நடவடிக்கையை காமெடியாக பார்கிறேன்! உதயநிதி ஸ்டாலின் கைது நடவடிக்கையை காமெடியாக பார்கிறேன்! உதயநிதி ஸ்டாலின் உதயநிதி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!உதயநிதி ஸ்டாலின் கைது? நீலாங்கரை வீட்டின் முன்பு போலீஸ் குவிப்பு!தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்நாளை பட்ஜெட் தாக்கல்: இன்று மாலை தவெக எம்எல்ஏக்கள் கூட்டம்!இன்று தமிழகத்தை அடைகிறது கா்நாடக அணை காவிரி நீா்!தமிழக பட்ஜெட் நாளை தாக்கல்: முக்கிய அறிவிப்புகள் வெளியாகின்றனஇந்தியப் பொருளாதாரம் 7.7% வளா்ச்சி!தமிழகத்தில் ஆக. 9 வரை மழைக்கு வாய்ப்புஉறுப்பு மாற்று சிகிச்சையில் தமிழகம் முதலிடம்!
/

மங்காத்தா: 12 ஆண்டுகள்!

நடிகர் அஜித்தின் மங்காத்தா திரைப்படம் வெளியாகி 12 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

News image
Updated On :6 பிப்ரவரி 2024, 6:39 pm IST

நடிகர் அஜித்தின் மங்காத்தா திரைப்படம் வெளியாகி 12 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

கடந்த 2011-ஆம் ஆண்டு வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் அஜித் குமார், அர்ஜூன், த்ரிஷா நடிப்பில் உருவான திரைப்படம் மங்காத்தா.

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கிய சென்னை 600028, சரோஜா, கோவா என்று வரிசையாக அனைத்து படங்களும் ஹிட் அடித்து அவருக்கென பெரும் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியது.

இந்த நிலையில், திரை வாழ்க்கையில் சிறிய சந்தித்த நடிகர் அஜித்துக்கு மங்காத்தா படம் பெரும் ‘கம்பேக்’காக அமைத்து ஹிட்டானது. அதற்கு காரணம் அஜித்தின் கதாபாத்திரமும், பின்னணி இசையும் தான்.

தொழிலதிபரின் கணக்கில் வராத பணத்தை கொள்ளையடிக்க திட்டமிடும் காவல் ஆய்வாளர் விநாயக் மகாதேவனாக கலக்கியிருப்பார் அஜித்.

கதாநாயகனாக அஜித்தை கொண்டாடிய ரசிகர்கள் எல்லாம் வில்லனாக கொண்டாட வைத்த படம் மங்காத்தா.

அஜித் வரும் காட்சிகள் முழுவதும் பின்னணி இசையில் யுவன்சங்கர் ராஜா அதிர வைத்திருப்பார். இன்றைக்கும் மங்காத்தா படத்தின் பின்னணி இசைக்கு பெரும் ரசிகர்கள் உண்டு.

நடிகர் அஜித்தை திரையுலகில் அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்ற மங்காத்தா படம் வெளியாகி 12 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

மங்காத்தா இரண்டாம் பாகத்துக்காக அஜித்தின் ரசிகர்கள் இன்றும் காத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.