சட்டப்பேரவைக்கு வரக்கூடாது என உதயநிதி பேசியிருப்பார்: அமைச்சர் அருண்ராஜ்உதயநிதியை இன்றே விடுவிக்க வேண்டும்! சென்னை உயர் நீதிமன்றம்!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது நடவடிக்கையில் சந்தேகம்: எடப்பாடி பழனிசாமிஉதயநிதியை அவசரமாக கைது செய்தது ஏன்? அன்புமணி கண்டனம்!உதயநிதி கைது! தமிழ்நாடு முழுவதும் திமுக போராட்டம்!உதயநிதி கைது: தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஓபிஎஸ் கைது!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது! தஞ்சை அழைத்துச் செல்லப்படுகிறார்எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது!உதயநிதியை அழைத்துச் செல்லும் வாகனத்தை மறித்து திமுகவினர் போராட்டம்!உதயநிதி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!
/

மறுவெளியீடான 3 படங்கள்!

முத்து, ஆளவந்தான், புதுப்பேட்டை ஆகிய மூன்று படங்கள் இன்று மறுவெளியீடாகியுள்ளன

News image
Updated On :6 பிப்ரவரி 2024, 6:53 pm IST

புதிய திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இருப்பது சாதாரணம். ஆனால், பல ஆண்டுகளுக்கு முன் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய, நன்றாக இருந்தும் கவனிக்கப்படாத திரைப்படங்களை இன்றும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 

இதனால், அப்படி வெற்றிபெற்ற படங்கள் மறுவெளியீடு செய்யப்படுகின்றன. நட்சத்திர நடிகர்களின் பிறந்தநாளுக்கு மட்டுமே அவர்கள் நடிப்பில் உருவான பழைய படங்கள் மறுவெளியீடு செய்யப்பட்ட நிலையில், தற்போது மறுவெளியீட்டிலும் பல படங்கள் வசூல் ஈட்டி வருவதால் தயாரிப்பாளர்கள் டிஜிட்டல் மெருகூட்டலுடன் தைரியமாக படங்களை வெளியிடுகின்றனர்.

அந்த வகையில், நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வசூல் சாதனையைப் படைத்த முத்து, வித்தியாசமான முயற்சியில் கவனம்பெற்ற கமல்ஹாசனின் ஆளவந்தான், வடசென்னை ரௌடிகளின் வாழ்க்கையை அரசியலுடன் இணைத்து விமர்சகர்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்திய தனுஷின் புதுப்பேட்டை ஆகிய படங்கள் இன்று பல திரையரங்குகளில் மறுவெளியீடு செய்யப்பட்டுள்ளன.

இதனால், அந்தந்த படங்களின் ரசிகர்கள் இதனைக் கொண்டாடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.