சஞ்சீவ் மற்றும் ஸ்ருதி ராஜின் புதிய தொடர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
சஞ்சீவ் வெங்கட் மற்றும் ஸ்ருதி ராஜ் இருவரும் தொலைகாட்சி மற்றும் சினிமா இரண்டிலும் நன்கு அறியப்பட்ட முகம்.
'திருமதி செல்வம்' தொடரில் செல்வம் என்ற கதாபாத்திரத்தில் நடித்தது ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகர் சஞ்சீவ் வெங்கட்.
இவர் மெட்டி ஒலி, நம்பிக்கை, அண்ணாமலை, அவர்கள், ஆனந்தம், அகல்யா, மனைவி, வேப்பிலைக்காரி, மை டியர் பூதம், பெண், சித்தி 2 உள்ளிட்ட தொடர்களில் நடித்துள்ளார்.
கிழக்கு வாசல் தொடரில் நடிக்கவிருந்த சஞ்சீவ், திடீரென அத்தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்தார். தற்போது வானத்தைப்போல தொடரில் காவல் துறை அதிகாரியாக நடித்து வருகிறார்.
அதேபோல் தென்றல் தொடரில் நடித்து ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கியவர் ஸ்ருதி ராஜ். இவர் நடித்த ஆஃபிஸ் தொடர் மிகவும் பிரபலமடைந்தது.
தொடர்ந்து இவர் நடித்த அழகு, அபூர்வ ராகங்கள், தாலாட்டு தொடர்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன.
இதையும் படிக்க: ஒடிடியில் வெளியானது கிடா!
இந்த நிலையில், சஞ்சீவ் மற்றும் ஸ்ருதி ராஜ் இணைந்து நடிக்கும் புதிய தொடர் சன் டிவியில் ஒளிபரப்பாகவுள்ளது. இத்தொடரில் திருமதி செல்வம் தொடரில் நடித்த ரிந்தியாவும் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.