பிகாரில் கங்கை நதியில் வெள்ளம்! 16 லட்சம் போ் பாதிப்பு; மீட்புப் பணிகள் தீவிரம்!ஐ.நா. பொதுச் சபை வருடாந்திர கூட்டத்தொடா்: செப்.26-இல் ஜெய்சங்கா் பங்கேற்பு ஜம்மு - காஷ்மீரில் சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதி பாகிஸ்தானைச் சோ்ந்தவா்: ராணுவம்தமிழகத்தில் 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புஐ.நா. பொதுச் சபை அமா்வில் உரையாற்றுகிறாா் நேபாள பிரதமா்! சா்வதேச சமூகத்திடம் இழப்பீடு கோர திட்டம்! அமெரிக்க அமைதிக் குழு வருகை: ரஷியா, உக்ரைன் சண்டை தற்காலிகமாக நிறுத்தி வைப்பு

‘சர்தார்’ பட இயக்குநருக்கு திருமணம்! 

சர்தார் திரைப்பட இயக்குநர் பி.எஸ்.மித்ரனுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. 

Published On :7 பிப்ரவரி 2024, 11:59 am IST

2018இல் இரும்புத்திரை படத்தின் மூலம் தமிழில் இயக்குநராக அறிமுகமானார் பி.எஸ்.மித்ரன். 2019இல் வெளியான ‘ஹீரோ’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. ஆனால் அடுத்து கார்த்தியுடன் எடுத்த சர்தார் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. 

சர்தார் படத்தில் கார்த்தியுடன் லைலா, ரஜிஷா விஜயன், ராஷி  கண்ணா, யூடியூப் பிரபலம் ரித்விக் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார். இந்தப் படம்   உலகம் முழுவதும் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாக அதிகாரபூர்வ தகவல்கள் வெளியானது.

படத்தின் அபார வசூல் வெற்றியால் இயக்குநர் பி.எஸ்.மித்ரனுக்கு படத்தின் தயாரிப்பாளர் லக்‌ஷ்மன் லான்சன் காரைப் பரிசாக வழங்கியது குறிப்பிடத்தக்கது.

Story image

தனது காதலி ஆஷாமீரா ஐயப்பன் அவர்களை தஞ்சாவூரில் குடும்பம் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் மணமுடித்துள்ளார். சினிமா பிரபலங்கள் இவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ’குலு குலு’ படத்தின் இயக்குநர் ரத்னகுமார்,  'இன்று நேற்று நாளை' படத்தின் இயக்குநர் ரவிக்குமார் ஆகியோர் இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர். 

புகைப்படத்தினைப் பதிவிட்டு ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனம் இந்த தம்பதியினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.