பிரபல இளம் நடிகர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கில் ’குண்டனபு பொம்மா’, ’நீக்கு நாகு டேஷ் டாஷ்’, ‘செகண்ட் ஹேண்ட்’ உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமடைந்த நடிகர் சுதீர் வர்மா(33) விசாகப்பட்டினத்திலுள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார்.
இதையும் படிக்க: தமிழக முதல்வரின் படத்தை டாட்டூ போட்டுக்கொண்ட விஷால்...
பட வாய்ப்புகள் குறைந்தது தற்கொலைக்கு காரணமாக இருக்கலாம் என அவரின் செய்திதொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
சுதீர் வர்மாவின் மறைவிற்கு தெலுங்கின் முக்கிய நடிகர்கள் ரசிகர்கள் இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.