கேரளம், அஸ்ஸாமில் வேட்புமனு தாக்கல் இன்று கடைசிஅமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தது 16,700 மெட்ரிக் டன் எல்பிஜிதேர்தல் நடவடிக்கையால் ‘ஹெச்பிவி' தடுப்பூசி திட்டம் பாதிக்காது: சுகாதாரத் துறைவெளிப்பகுதி பறவைகளால் கிண்டி பூங்காவில் பரவிய பறவைக் காய்ச்சல்! ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானுக்கு டிரம்ப் 48 மணி நேர கெடுமுதல்வர் ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் குழு சந்திப்பு! இன்று தொகுதி உடன்பாடு?தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான நோட்டீஸ் மீது நடவடிக்கை எப்போது?எதிா்க்கட்சிகள் காத்திருப்பு! கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

எதிர்நீச்சலை விஞ்சுமோ? 4 நாயகிகளுடன்... அதிக பொருள் செலவில் புதிய சீரியல்?

தொலைக்காட்சி வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் அதிக பொருள் செலவில் புதிய தொடரை (சீரியல்) உருவாக்க பிரபல தொலைக்காட்சி திட்டமிட்டுள்ளது. 

News image
Updated On :12 ஜூலை 2023, 11:46 am

DIN


தொலைக்காட்சி வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் அதிக பொருள் செலவில் புதிய தொடரை (சீரியல்) உருவாக்க பிரபல தொலைக்காட்சி திட்டமிட்டுள்ளது. 

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்கள் பெரும்பாலான இல்லத்தரசிகளைக் கவர்ந்துள்ளது. மாலை நேரங்களில் ஒளிபரப்பாகும் சில தொடர்கள், வயது வித்தியாசமின்றி இளம் தலைமுறையினரையும் ஈர்த்துள்ளது.

அவ்வபோது புதிய தொடர்களை அறிமுகம் செய்து ஒளிபரப்பிவரும் சன் தொலைக்காட்சி தற்போது பிரமாண்ட தொடர் தயாரிக்க திட்டமிட்டுள்ளது. இந்தத் தொடர் இதுவரை இல்லாத வகையில் அதிக பொருள் செலவில் உருவாக்கப்படும் என்றும் தெரிகிறது. 

கண்ணான கண்ணே தொடரை தயாரித்த சன் என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் ஏ.ஆர். ஃபிலிம் வோர்ல்ட் நிறுவனமும் இணைந்து இந்தத் தொடரை தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. 

இந்தத் தொடரில் 4 கதாநாயகிகள், 50 துணைக் கதாபாத்திரங்களை நடிக்க வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

சன் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகிவரும் எதிர்நீச்சல் தொடரில் முன்னணி பிரலங்கள் அதிகமானோர்  முக்கிய பாத்திரங்களில் நடித்து வருகின்றனர். ஊதியம், இன்ன பிற அம்சங்களுக்காக  அதிக பொருள் செலவும் செய்யப்படுகிறது. விமர்சன ரீதியாகவும் எதிர்நீச்சல் தொடர் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. 

தற்போது திரைப்படங்களுக்கு இணையாக காட்சி அமைப்புகளுக்கு சின்னத் திரையிலும் மெனக்கெடல்கள் எடுக்கப்படுகின்றன. அந்தவகையில், தற்போது ஒரு எபிஸோடுக்கு அதிக பொருள் செலவிட முன்வருவது, சின்னத் திரை தொடர்களின் ஆரோக்கியத்தையே குறிக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.