தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புவிவசாயக் கடன் தள்ளுபடி திட்டம் இல்லை: நிதித் துறை அமைச்சர்ஒரே நாளில் 2,036 காவலா்கள் பணியிட மாற்றம்பொட்டாஷ் உரம் தட்டுப்பாடு: விவசாயிகள் வேதனை
/

விஜய் அண்ணா பிறந்தநாளில் ஆச்சரியம்... காத்திருங்கள்...!: லோகேஷ் கனகராஜ் 

நடிகர் விஜய் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு ஆச்சரியம் உள்ளதென இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார். 

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 12:39 am IST

விக்ரம் படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகர் விஜய்யுடன் லியோ படத்தில் இணைந்துள்ளார். இதில் த்ரிஷா,  சஞ்சய் தத் உள்ளிட்ட பல பிரபலங்கள் இணைந்துள்ளனர்.

மிஷ்கின், சஞ்சய் தத், கௌதம் மேனன்  ஆகியோர் காஷ்மீர் படப்பிடிப்பை முடித்துவிட்டதாக லோகேஷ் சமீபத்தில் கூறியிருந்தார். இப்படம் வெளியீட்டிற்கு முன்பே ஓடிடி, இசை உரிமம், விநியோக உரிமம் என ரூ.350 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

லியோ படம் இந்தாண்டு அக்டோபர் மாதம் திரைக்கு வருகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். லியோ படத்தின் முதல் பாடலானது விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Story image

லியோ படத்தில் நடிகர் விஜய் அறிமுக பாடலைப் பாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய்யுடன் நடனம் ஆடியுள்ளதாகவும் முதல் பாடலில் மடோனாவின் பங்கு அதிகமிருக்குமெனவும் விடியோவிற்கு நடிகர் கமல்ஹாசன் பின்னணிக் குரல் கொடுக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில் யூடியூப் சேனல் ஒன்றிற்கு லோகேஷ் கனகராஜ் பேட்டியளித்துள்ளார். அதில் கூறியதாவது: 

விஜய் அண்ணாவின் பிறந்தநாளில் மிகப்பெரிய ஆச்சரியம் ரசிகர்களுக்கு காத்திருக்கிறது. வேறெதும் சொல்ல விரும்பவில்லை. நிச்சயமாக ரசிகர்கள் கொண்டாடும் வகையிலிருக்கும். படப்பிடிப்பிற்கு கால தாமதாமாக வருவதற்காக விஜய் அண்ணாவிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். இன்னும் படத்திற்கு 3 மாதங்கள் உள்ளது. எல்சியூ பற்றி இப்போதைக்கு எதுவும் சொல்லமுடியாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.