மாணவர் பாரதிதாசனுக்கு கல்வி நிதி விடுவிக்கப்படும்! - அமைச்சர் வன்னி அரசுசென்னை குற்றப்பிரிவில் அன்பில் மகேஸ் ஆஜர்!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!

‘லியோ’ படப்பிடிப்பில் சஞ்சய் தத்: விடியோ வெளியிட்டு இன்ப அதிர்ச்சியளித்த படக்குழு!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் லியோ படப்பிடிப்பில் சஞ்சய் தத் இணைந்துள்ளார். 

Published On :


மாஸ்டர் திரைப்படத்திற்குப் பிறகு நடிகர் விஜய் - இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் திரைப்படம் லியோ. விக்ரம் வெற்றியைத் தொடர்ந்து இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்தப் படத்தில் நடிக்க உள்ளவர்களின் விவரங்கள் வெளியாகி ரசிகர்களிடையே ஆவலை ஏற்படுத்தி வருகின்றன. இந்தப் படத்தில் நடிகை த்ரிஷா, ஆக்‌ஷன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், சஞ்சய் தத், மிஷ்கின், சாண்டி, மேத்யுவ் தாமஸ், கெளதம் வாசுதேவ் ஆகியோர் நடிக்க உள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது.

பிரபல ஹிந்தி நடிகர் சஞ்சய் தத் கே.ஜி.எஃப் படத்தில் வில்லனாக அசத்தினார். லியோ படத்திலும் இணைந்துள்ளது எதிர்பார்பை அதிகரித்துள்ளது. தற்போது காஷ்மீரில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்தப் படத்திற்காக சஞ்சய் தத் வெறித்தனமாக உடற்பயிற்சி செய்யும் விடியோக்கள் சமீபத்தில் வைரலானது. 

தற்போது, சஞ்சய் தத் லியோ படப்பிடிப்பில் கலந்து கொண்ட விடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. ரசிகர்கள் விஜய்யின் தோற்றத்தை பார்த்ததில் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

இந்தாண்டு அக்டோபர் மாதம் 19ஆம் தேதி இந்தப்படம் திரையரங்குகளில் வெளியாகுமென படக்குழு ஏற்கனவே தெரிவித்திருந்தது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.