

இயக்குநரும் நடிகருமான மறைந்த மனோபாலாவின் உடல் நாளை தகனம் செய்யப்பட உள்ளது.
கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு கடந்த 15 நாள்களாக சிகிச்சைப் பெற்று வந்த மனோபாலா, சென்னையில் உள்ள அவரது வீட்டில் இன்று காலை உயிரிழந்தார்.
இவரது மறைவுக்கு திரைத்துறையினர், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் எனப் பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், மறைந்த மனோபாலாவின் உடல் நாளை (மே - 4) காலை 10 மணிக்கு சென்னை வளசரவாக்கம் மின் மயானத்தில் தகனம் செய்யப்படும் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.