எங்களை துரத்துவதை நிறுத்துங்கள்! மோடியை விமர்சித்த சிறுமியின் தாய் ஆத்திரம்பைக்-டாக்ஸி ஓட்டினால் அபராதம்: நீதிமன்றத்தில் தமிழக அரசுசென்னையின் அண்டை மாவட்டங்களை சுற்றிவளைத்த மழை!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ. 95.31 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை!பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

எதிர்நீச்சல்: வேல ராமமூர்த்தியேதான்!

எதிர்நீச்சல் தொடரில் ஆதி குணசேகரன் பாத்திரத்தில் மாரிமுத்துவுக்கு பதிலாக நடிப்பவர் வேல ராமமூர்த்தி என்பது உறுதியாகியுள்ளது. 

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 5:18 pm IST

எதிர்நீச்சல் தொடரில் ஆதி குணசேகரன் பாத்திரத்தில் மாரிமுத்துவுக்கு பதிலாக நடிப்பவர் வேல ராமமூர்த்தி என்பது உறுதியாகியுள்ளது. 

சன் தொலைக்காட்சியில் இன்று ஒளிபரப்பான எபிஸோட் மூலம் ரசிகர்களிடயே எழுந்த, யார் அடுத்த ஆதி குணசேகரன்? என்ற நீண்டநாள் கேள்விக்கு பதில் கிடைத்துள்ளது. 

சன் தொலைக்காட்சியில் வாரத்தின் அனைத்து நாள்களிலும் ஒளிபரப்பாகிவரும் தொடர் எதிர்நீச்சல். இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த நிலையில், பிக்பாஸ் ஒளிபரப்பு தொடங்கியதுமுதல் இரவு 9 மணிக்கு மாற்றப்பட்டுள்ளது. 

எதிர்நீச்சல் தொடரில் பல்வேறு பாத்திரங்கள் மக்கள் மனங்களை வென்றுள்ளன. குறிப்பாக ஆதி குணசேகரன் பாத்திரம் அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. 

நக்கல் நிறைந்த வில்லனாக ஆதி குணசேகரன் பாத்திரத்தில் நடிகர் மாரிமுத்து நடித்துவந்தார். அவர் மறைவுக்குப் பிறகு அந்த பாத்திரத்தில் வேறு யார் நடிப்பார் என்ற கேள்வியும் எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே எழுந்தது. 

ஆதி குணசேகரன் பாத்திரத்தில் மாரிமுத்து

ஆதி குணசேகரன் பாத்திரத்தில் மாரிமுத்து

ஆதி குணசேகரன் பாத்திரம் பலரைக் கவர்ந்ததால், அந்த பாத்திரத்தில் நடிப்பவர்கள் குறித்த தகவல்கள் பலவாறு பகிரப்பட்டன. சமூக வலைதளத்தில் பெரும் விவாதமே நடந்தது.

ஆதி குணசேகரனாக நடிப்பதாக வேல ராமமூர்த்தி - நடிகர் பசுபதி - இளவரசு - பூவிலங்கு மோகன் உள்ளிட்டோரின் பெயர்கள் சமூக வலைதளங்களில் வலம் வந்தன.

Story image

இந்நிலையில், சமீபத்தில் ஆதிகுணசேகரன் அறிமுகமாவதாக முன்னோட்ட விடியோக்களும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டன. ஆனால், அவற்றில் ஒன்றில் கூட ஆதி குணசேகரனாக நடிப்பது யார் என்பது தெரியாத வண்ணம் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இதனால், அடுத்த ஆதி குணசேகரன் யார் என்பதை தெரிந்துகொள்ள, சீரியலுக்கு அப்பாற்பட்டவர்களுக்கும் ஆர்வம் ஏற்பட்டது.

Story image

இதனிடையே புதன்கிழமை இன்று (அக். 4) ஒளிபரப்பான எதிர்நீச்சல் தொடரில், ஆதி குணசேகரனாக நடிப்பது வேல ராமமூர்த்தி என்பது உறுதியாகியுள்ளது. ஆதி குணசேகரனாக வேல ராமமூர்த்தியின் அறிமுக காட்சிகள் இடம்பெற்றுள்ளன. 

தனது நக்கல் நிறைந்த மிரட்டல் நடிப்பால் மாரிமுத்து வலு சேர்த்ததைப்போல, ஆதி குணசேகரன் பாத்திரத்திற்கு வேல ராமமூர்த்தியும் வலு சேர்க்கும் அளவுக்கு அடுத்தடுத்த எபிஸோட்களில் நன்றாக நடிக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.