லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படத்தின் டிரைலர் அக். 5ஆம் தேதி வெளியானது. டிரைலருக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்துள்ளது. கவனம் ஈர்க்கும் சண்டைக்காட்சிகளையும் விஜய்யின் இரு வித்தியாசமான தோற்றத்தையும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இதுவரை 41 மில்லியன் (4.1 கோடி) பார்வைகளைக் கடந்து டிரெண்டிங்கில் தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறது.
இருப்பினும், டிரைலரில் நடிகர் விஜய் கதாபாத்திரம் தகாத வார்த்தை ஒன்றைப் பேசியிருப்பது சர்ச்சையானது. இதற்கு லோகேஷ் கனகராஜ் விளக்கமளித்துள்ளார்.

லியோ போஸ்டரிலும் த்ரிஷா புகைப்படத்துக்கு ரசிகர்கள், “என்ன போஸ்டரிலே த்ரிஷாவை கொலை செய்து விட்டாரே லோகேஷ் ...” என கிண்டலாக மீம்ஸ்களை பதிவிட்டு வந்தனர்.
லோகேஷ் படங்களில் நாயகிகள் என்றாலே இறந்துவிடுவார்கள் என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. இது குறித்து நேர்காணல் ஒன்றில் இயக்குநர் லோகேஷ் கனகராஜிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்து பேசிய லோகேஷ், “இது குறித்து த்ரிஷா மேடமும் என்னிடம் கேள்வி கேட்டார். நானும் ப்ரியா ஆனந்தும் இருக்கிரோம். இருவரில் யாரைக் கொலை செய்ய போகிறீர்கள் எனக் கேட்டார். உங்களது ஆசைக்காகவே யாரையாவது கொலை செய்து விடுவோம் என ஜாலியாக கூறினேன்.

விக்ரம் படப்பிடிப்பில் காயத்ரி...
இதையும் படிக்க: இந்திய சினிமாவில் முதன்முறை: ஜவான் வரலாற்று சாதனை!
ப்ரியா ஆனந்த் விக்ரம் படத்திலே நடிக்க வேண்டியது மிஸ் ஆகிவிட்டது. லியோவில் கௌதம் மேனனுக்கு ஜோடியாக நடித்துள்ளார்” எனப் பேசினார். படம் வெளியான பிறகே யார் இறப்பார்களென தெரியும்.

இதையும் படிக்க: கார்த்தியின் 26வது படத்தில் கீர்த்தி ஷெட்டி!
முருகதாஸ் இயக்கிய துப்பாக்கி படத்திலும் முதலில் ப்ரியா ஆனந்த் நடிக்கவிருந்ததும் பின்னர் சில காரணங்களால் அது கைவிடப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியது குறிப்பிடத்தக்கது.

லியோ திரைப்படம் அக்.19 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
நேபாளத்தில் கலவரம்: உ.பி.யில் 7 மாவட்டங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு!

இன்றைய முக்கிய செய்திகள் ஆகஸ்ட் 3 - நேரலை!

மேக்மைட்ரிப் முதல் காலாண்டு லாபம் 8.6% அதிகரிப்பு!

பிரசாந்த் கிஷோருக்கு மு.க. ஸ்டாலின் வாழ்த்து!
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



