நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

சிங்கள இயக்குநருடன் இணைந்த மணிரத்னம்!

தரமான படங்களை இயக்கிவரும் சிங்கள இயக்குநர் பிரசன்ன விதானகே உடன் இணைந்துள்ளார் திரைப்பட இயக்குநர் மணிரத்னம்

News image

இயக்குநர் மணிரத்னம்

Updated On :20 அக்டோபர் 2023, 11:00 am IST

இலங்கையில் விமர்சனரீதியில் பெரும் வரவேற்பை பெறக்கூடிய படங்களை எடுத்துவருபவர் சிங்கள இயக்குநர் பிரசன்ன விதானகே. 

தமிழருக்கும், சிங்களருக்கும் இடையே நடந்த பிரச்னைகளை நடுநிலையாக  அணுகி அவர் எடுத்த 'டெத் ஆன் எ ஃபுல் மூன் டே' திரைப்படம் போரைக் கையிலெடுக்கும் நாடுகளின் மனசாட்சியை உலுக்கக்கூடிய ஒன்றாக அமைந்தது. 

இனப்பிரச்னை தீவிரமாக இருந்த 1997-ஆம் ஆண்டில் வெளிவந்த இத்திரைப்படம் ஒரு ராணுவ வீரரின் மரணத்தின் மூலம் இலங்கை ராணுவத்தை துணிந்து விமர்சித்தது. 

தற்போது அவர் எழுதி இயக்கியிருக்கும் பேரடைஸ் படத்தினை நியூட்டன் சினிமா என்ற தமிழ்ப்படத் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. அப்படத்தைப் பார்த்த தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் மணிரத்னம் அவரது மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்தின் மூலமாக அதை திரையரங்குகளுக்கு கொண்டு வருகிறார். 

போருக்குப் பிறகு பொருளாதார வீழ்ச்சியால் தள்ளாடும் இலங்கைக்கு சுற்றுலா வரும் ஒரு தம்பதியைப் பற்றிய கதை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரோஷன் மேத்யூ, தர்ஷனா, ஷியாம் பெர்ணாண்டோ உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம் தென்கொரியாவின் புகழ்பெற்ற பூஸன் திரைப்பட விழாவில் சிறந்த படத்துக்கான கிம் ஜிஜோக் விருது வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.