16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு! கிளாம்பாக்கத்திலிருந்து இன்று மாலை முதல் கூடுதல் மாநகரப் பேருந்துகள்!செய்யறிவே எதிர்காலம்; வளர்ச்சியை மட்டுப்படுத்த முடியாது! டிரம்ப் திட்டவட்டம்!மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்பு

வாணி போஜன், பிரியா பவானி வரிசையில் சீரியல் நடிகை ராதிகா பிரீத்தி!

பெங்களூருவைச் சேர்ந்த ராதிகா பிரீத்தி, சிறு வயது முதலே நடிப்பதில் ஆர்வம் கொண்டிருந்ததால், தொடர்ந்து வாய்ப்புகளைத் தேடியுள்ளார். 

Published On :

பூவே உனக்காக தொடரில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை ராதிகா பிரீத்தி, வெள்ளித்திரையில் நாயகியாக நடிக்கவுள்ளார். இதனால், நடிகை வாணி போஜன், பிரியா பவானி சங்கர் வரிசையில் தற்போது ராதிகா பிரீத்தியும் இணைந்துள்ளதாக ரசிகர்கள் தெரிவிக்கின்றனர். 

சன் தொலைக்காட்சியில் 2020 முதல் 2022 வரை பூவே உனக்காக தொடர் ஒளிபரப்பானது. இந்தத் தொடரில் முதன்மை பாத்திரத்தில் நடித்தவர் ராதிகா பிரீத்தி. 

இந்தத் தொடரில் நடித்ததன் மூலம் பலதரப்பட்ட ரசிகர்களைக் கவர்ந்தார். அதனைத் தொடர்ந்து மாடலிங் துறையிலும் இருந்து வந்தார். 

ராதிகா பிரீத்தி

ராதிகா பிரீத்தி

கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த ராதிகா பிரீத்தி, சிறு வயது முதலே நடிப்பதில் ஆர்வம் கொண்டிருந்ததால், தொடர்ந்து வாய்ப்புகளைத் தேடியுள்ளார். 

கன்னட மொழியில் பன்டா (panta) என திரைப்படத்திலும் நடித்துள்ளார். அதன் பிறகுதான் தமிழில் பூவே உனக்காக தொடரில் நடித்தார். தற்போது தமிழில் மீண்டும் கதாநாயகியாக களமிறங்குகிறார். 

சந்தானம் நடிப்பில் உருவாகிவரும் பில்டப் திரைப்படத்தில் நாயகியாக நடித்துவருகிறார். இந்தப் படத்தை இயக்குநர் கல்யாண் இயக்குகிறார்.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.