அல்லு அர்ஜுன் புஷ்பா - 2 படத்தில் நடித்து முடித்துள்ளார். பிரம்மாண்ட பொருள் செலவில் உருவான புஷ்பா - 2 வசூல் சாதனையை நிகழ்த்தும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்திற்குப் பின், இயக்குநர் அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பார் என்கிற தகவல்களும் வெளியாகி வருகிறது.
இந்த நிலையில், புஷ்பா - 2 படத்திற்குப் பின் நடிகர் அல்லு அர்ஜுன் தன் சம்பளத்தை ரூ.150 கோடியாக உயர்த்த திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
புஷ்பா - 2 வெளியீட்டுக்கு முன்பாகவே ரூ.300 கோடிக்கான வணிகத்தை ஈட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.