நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

விடாமுயற்சி படக்குழு பகிர்ந்த புதிய போஸ்டர்! புதிய தோற்றத்தில் ஆரவ்!

நடிகர் ஆரவ் போஸ்டரை விடாமுயற்சி படக்குழு வெளியிட்டுள்ளது.

News image

அஜித், ஆரவ்.

Updated On :9 ஆகஸ்ட் 2024, 3:34 pm IST

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் ஆரவ். அவரது முதல் படம் மார்கெட் ராஜா எம்பிபிஎஸ் சரண் இயக்கத்தில் வெளியானது. 

இயக்குநர் மகிழ்திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் தயாரித்து நடித்த கலகத் தலைவன் படத்தில் ஆரவ் நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார்.

நடிகர் அஜித் அதிரடி சாகச காட்சிகளுக்கும் டூப் போடாமல் நடிக்கும் காட்சிகள் அஜர்பைஜான் நாட்டில் படமாக்கப்பட்டு வருகின்றன.

இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

’மங்காத்தா’ படத்துக்குப் பின், நடிகர் அர்ஜுன் இத்திரைப்படத்தில் அஜித்குமாருடன் மீண்டும் இணைந்து நடிப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்தப் படத்தில் ரெஜினா, சஞ்சய் தத், அருண் விஜய் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். தீபாவளிக்கு படத்தினை வெளியிடபடக்குழு திட்டமிட்டுள்ளது.

நடிகர் அஜித் குமாருக்கு முக்கிய வில்லனாக சஞ்சய் தத்தும் மற்றொரு வில்லனாக நடிகர் ஆரவ்வும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.

இந்நிலையில் நடிகர் ஆரவ் போஸ்டர் வெளியாகியுள்ளது.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.