விநாயகர் சதுர்த்தி: முதல்வர் விஜய் வாழ்த்துவட இந்திய பெருங்கடலில் அடுத்த 3 மாதங்களுக்குள் 3 புயல்கள்: கடும் சேதம் ஏற்பட வாய்ப்புவரலாற்றில் முதல்முறையாக மூன்றாவது இடத்தில் திமுக கூட்டணி: அமைச்சர்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

‘கூலி’ படத்தில் இணைத்ததற்கு நன்றி லோகேஷ்: நாகர்ஜுனா

கூலி படத்தில் இணைத்ததற்கு லோகேஷ் கனகராஜுக்கு நாகர்ஜுனா நன்றி தெரிவித்துள்ளார்.

Published On :

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் கூலி படத்தில் இணைத்ததற்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு நாகர்ஜுனா நன்றி தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் கூலி படத்தின் கதாபாத்திர அறிமுக போஸ்டர் வியாழக்கிழமை வெளியானது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த்தின் 171 படமாக கூலி உருவாகிறது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி இயக்கத்தில் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்ருதி ஹாசன், சத்யராஜ், உபேந்திரா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இந்த நிலையில், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜுனாவின் போஸ்டரை படக்குழு பகிர்ந்தது. இதில், சிமோன் என்ற கதாபாத்திரத்தில் நாகர்ஜுனா நடிக்கிறார். நாகர்ஜுனாவின் 65 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு இந்தப் போஸ்டர் வெளியானது.

இதுகுறித்து நடிகர் நாகர்ஜுனா தன்னுடைய எக்ஸ் தளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளப் பதிவில், “கைதி படத்தில் இருந்தே உங்களுடன்(லோகேஷ் கனகராஜ்) பணியாற்ற வேண்டும் எனக் காத்திருந்தேன். கூலி படத்தில் என்னை இணைத்தற்கு நன்றி லோகி. புதிய படத்தில் ஒன்றாக இணைந்து பயணிக்க ஆர்வமாக உள்ளேன். தலைவர் ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்” எனக் கூறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.