
இயக்குநர் வெங்கட் பிரபு கஸ்டடி திரைப்படத்துக்குப் பிறகு விஜய்யின் 68-வது படமான ‘கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ்’ (G.O.A.T. - Greatest Of All Times) படத்தை இயக்கியுள்ளார்.
கோட் திரைப்படம் 3 மணி நேரம் என தகவல் வெளியாகிய நிலையில் இது குறித்து இயக்குநர் வெங்கட் பிரபு நேர்காணலில் பதிலளித்துள்ளார்.
இந்தப் படம் வருகிற செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாவுள்ளது.
கோட் படத்தில் நடிகர்கள் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இந்நிலையில் மலையாள நடிகர் மோகன்லாலை இயக்குநர் வெங்கட் பிரபு சந்தித்த புகைப்படங்கள் வைரலாகியுள்ளன.
இதனால் கோட் படத்தில் மோகன்லாலும் நடிக்கிறாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
கோட் படத்தின் இறுதிக்கட்ட ஒலிக் கலவைகள் (சவுண்ட் மிக்சிங்) சேர்க்கப்பட்டன. அதே இடத்தில் மோகன்லாலும் அவரது பரோஜ் படத்துக்கான போஸ்ட் புரடக்ஷன்ஸ் பணிகளுக்காக வந்திருக்கிறார்.
இந்தச் சந்திப்பு சாதரணமாக நடந்ததா அல்லது நன்றி தெரிவிக்க நடைபெற்றதா என படம் வெளியான பிறகே தெரியவரும். ஆனால் பிரேம்ஜி நன்றி தெரிவித்துள்ளதால் சந்தேகம் வலுவடைந்துள்ளதாக சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.