எங்களை துரத்துவதை நிறுத்துங்கள்! மோடியை விமர்சித்த சிறுமியின் தாய் ஆத்திரம்பைக்-டாக்ஸி ஓட்டினால் அபராதம்: நீதிமன்றத்தில் தமிழக அரசுசென்னையின் அண்டை மாவட்டங்களை சுற்றிவளைத்த மழை!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ. 95.31 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை!பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

பிர்சா முண்டா படப்பிடிப்பு எப்போது? பா.இரஞ்சித் பதில்!

இயக்குநர் பா.இரஞ்சித் பிர்சா முண்டா படம் குறித்து நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார்.

News image

பா.இரஞ்சித்

Updated On :30 ஆகஸ்ட் 2024, 11:20 am IST

ஜார்க்கண்ட் பகுதியைச் சேர்ந்த உலிஹட்டில் பிறந்தவர் பிர்சா முண்டா. பழங்குடி இன மக்களின் விடுதலைக்காகத் தொடர்ந்து போராடிய முண்டா, 1890களில் ஆங்கிலேயர்களுக்கு எதிரான போராட்டத்தில் கைது செய்யப்பட்டு, 25ஆவது வயதில் சிறையில் இறந்தார்.

அவருடைய வாழ்க்கையைத் திரைப்படமாக எடுப்பதாக சில ஆண்டுகளுக்கு முன்பே இயக்குநர் பா. இரஞ்சித் கூறியிருந்தார்.

பழங்குடியின தலைவர் பிர்சா முண்டா பிறந்தநாள் ‘ஜன்ஜாதிய கவுரவ் திவாஸ்’ என்று கொண்டாடப்படுகிறது.

தற்போது தங்கலான் புரமோஷனுக்காக மும்பை சென்ற பா. இரஞ்சித், பார்வதி, விக்ரம் யூடியூப் கலந்துரையாடல்களில் பங்குபெற்றனர்.

இந்த நேர்காணலில் பா. இரஞ்சித்திடம் ஹிந்தி திரைப்படம் எப்போது எனக் கேட்டார்கள். அதற்கு பா.இரஞ்சித், “பிர்சா முண்டா படத்துக்கான ஸ்கிரிப்ட் வேலைகள் முடிந்தன. நாயகர்களை தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் இது குறித்து அறிவிப்பு வெளியாகும்.

தங்கலான் 2 எடுக்க வாய்ப்புள்ளதாகவும் ஆனால் இப்போதைக்கு இதிலிருந்து வெளியேற வேண்டும். பல கதைகள் இருக்கின்றன. எதை எடுப்பது என்பதை இன்னும் 2 வாரங்களில் முடிவெடுக்கவிருக்கிறேன்” எனக் கூறினார்.

தங்கலான் ஹிந்தியில் செப்.6ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. சார்பட்டா 2, ஜெர்மனி, ஹிந்தி திரைப்படம் உள்பட பல கதைகள் உள்ளன.

இப்போதைக்கு சார்பட்டா பரம்பரை 2 படத்துக்கான வேலைகள்தான் மும்முரமாக நடைபெற்று வருவதாகவும் நேர்காணலில் இயக்குநர் பா.இரஞ்சித் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.