காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

விஜய் 69: விஜய்யின் கதாபாத்திரம் என்ன தெரியுமா?

விஜய்யின் கடைசி படமான விஜய் 69 படத்தில் அவரது கதாபாத்திரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

பூஜா ஹெக்டே, விஜய்

Published On :

விஜய்யின் கடைசி படமான விஜய் 69 படத்தில் அவரது கதாபாத்திரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதில் நடிகர் விஜய் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காவலதிகாரி கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக தகவல் கூறப்படுகிறது.

நடிகர் விஜய்யின் கடைசி படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். கேவிஎன் புரடக்‌ஷன்ஸ் தயாரிக்கிறது. இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே நாயகியாக நடிக்கிறார்.

இந்தப் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது. தற்போது, இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் பூஜா ஹெக்டே இணைந்திருக்கிறார்.

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காவலதிகாரி ஒருவர் சிறப்பு வழக்குக்காக மீண்டும் காவலதிகாரியாக மாறுவதாக விஜய் 69 படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளதாக ஐஏஎன்எஸ் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விஜய் ஏற்கனவே போக்கிரி, ஜில்லா, தெறி ஆகிய படங்களில் காவலதிகரியாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

காவலதிகாரியாக விஜய்

காவலதிகாரியாக விஜய்

இந்தப் படம் அக்.2025இல் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் வெளியாகுமென படக்குழு அறிவித்திருக்கிறது.

கடந்த அக்.4ஆம் தேதி படத்தின் பூஜை தொடங்கியது. இதன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின. இதில் பாபி தியோல், பிரியாமணி, பிரகாஷ் ராஜ், மமிதா பைஜூ நடிக்கிறார்கள்.

சூர்யா 44 படத்தில் நடித்து முடித்துள்ள பூஜா ஹெக்டே ஷாகித் கபூருடன் தேவா படத்திலும் நடித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.