'இந்த வெற்றி கண்ணீரைத் துடைத்திருக்கிறது..’: சாந்தனு உருக்கம்

ப்ளூ ஸ்டார் படத்தின் வெற்றி விழாவில் நடிகர் சாந்தனு நெகிழ்ச்சியாக பேசியுள்ளார். 
'இந்த வெற்றி கண்ணீரைத் துடைத்திருக்கிறது..’: சாந்தனு உருக்கம்

இயக்குநர் பா.ரஞ்சித்திடம் உதவி இயக்குநராக இருந்த எஸ்.ஜெயக்குமார் இயக்கத்தில் அசோக் செல்வன், சாந்தனு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ப்ளூ ஸ்டார்.

இதனை நீலம் புரோடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. கிரிக்கெட்டை மையப்படுத்தி வெளியான இப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்று வசூலிலும் கலக்கி வருகிறது. நடிகர்கள் அசோக் செல்வன், சாந்தனு, ப்ரித்வியின் நடிப்பும் பெரிதும் ரசிக்கும் படியாக இருந்தது. 

படத்தின் வெற்றியைப் படக்குழுவினர் நேற்று (ஜன.31) கொண்டாடினர். அப்போது பேசிய நடிகர் சாந்தனு, “இந்த வெற்றிக்காக நான் 15 ஆண்டுகளாக காத்துக்  கொண்டிருந்தேன். இன்னும் கூட என்னால் இதை நம்பமுடியவில்லை. இப்படி ஒரு நல்ல விசயம் என் வாழ்வில் நடக்கிறதா? என்னால் நம்பமுடியவில்லை என்று என் மனைவியிடம் நேற்று கூட பேசிக் கொண்டிருந்தேன்… சக்சஸ் மீட்டில் சந்திப்போம்  என்று பலமுறை பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசி இருக்கிறோம். ஆனால் சக்சஸ் மீட் என்பது இதுதான் என்  வாழ்வில் முதல்முறை. 

ப்ருத்வி பேசிய அனைத்தும் எனக்கும் பொருந்தும். இப்படத்தின் வெற்றி எப்படிப்பட்ட படத்தை தேர்வு செய்து நடிக்க வேண்டும் என்பதை எனக்குக் கற்றுக் கொடுத்தது.  மேலும் என் அப்பா அம்மாவை சந்தோசப்படுத்திப் பார்க்கும் வாய்ப்பை எனக்கு இந்த ப்ளூ ஸ்டார் கொடுத்திருக்கிறது. 

ராஜேஷ் என்னும் இந்த கதாபாத்திரம் இன்று இந்த அளவிற்கு பேசப்படுகிறது என்றால் அதற்கு முழு முதற் காரணம் வசனம் எழுதிய எழுத்தாளர் தமிழ் பிரபா மற்றும் இயக்குநர் ஜெயக்குமார் இருவரும் தான். அவர்களுக்கு பெரிய நன்றி.  மிகப்பெரிய வேலையை அவர்கள் இருவரும் செய்து முடித்துவிட்டார்கள். அதைப் பேசி நடித்ததால் தான் இன்று அக்கதாபாத்திரம் கொண்டாடப்படுகிறது. எழுத்தாளர் ஒரு படத்திற்கு எவ்வளவு முக்கியம் என்பதை நான் முதலில் என் அப்பாவிடம் இருந்து கற்றுக் கொண்டேன்.. இப்பொழுது ப்ளூ ஸ்டார் படத்தின் மூலம் அது மீண்டும் நிருபனமாகி இருக்கிறது. 

என் அப்பா, எத்தனையோ நடிகர்களுக்கு நான் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுக்  கொடுத்திருக்கிறேன்… ஆனால் என் மகனுக்கு என்னால் அப்படி ஒரு வெற்றியைக்  கொடுக்க முடியவில்லையே என்று கண்கலங்கி இருக்கிறார். ப்ளூ ஸ்டார் படத்தின் வெற்றி அந்தக் கண்ணீரைத் துடைத்திருக்கிறது. அதற்காகவும் இப்படக்குழுவினருக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்.

இசையமைப்பாளர், உதவி இயக்குநர்கள், ஓளிப்பதிவாளர் தமிழ் அமுதன் அனைவருக்கும், நன்றி. ஆல்பா பாய்ஸ் கிரிக்கெட் அணியினருக்கும், ப்ளூ ஸ்டார் கிரிக்கெட் அணியினருக்கும் நன்றி.  இப்படத்தை வெற்றிப்படமாக்கிய மக்கள், பத்திரிக்கை தொலைக்காட்சி மற்றும் ஊடக நண்பர்களுக்கும் நன்றிகள். 

இந்த வெற்றிக்காக வாழ்த்து தெரிவித்து என் அப்பா இயக்குநர் கே.பாக்யராஜ் ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அதை இங்கு வாசிக்க விரும்புகிறேன் என்று கூறி சாந்தனு அக்கடிதத்தை வாசித்தார்.  அதில் ”கே.பாக்யராஜ் கிரிக்கெட் வீரராக ஆக வேண்டும் என்று எண்ணிய தன் மகன் சாந்தனுவை, முதன்முறையாக நடிக்க வைத்து நடிப்புக்குள் கொண்டு வந்த கணத்தை நினைவு கூர்ந்திருந்ததோடு, “ப்ளூ  ஸ்டார்” படத்தில் அதே கிரிக்கெட் விளையாடும் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் வெற்றியை பதிவு செய்திருக்கும் சாந்தனுக்கும் , இந்த வெற்றியை அவருக்குக் கொடுத்த இயக்குநர் ஜெயக்குமார், தயாரிப்பாளர் பா.ரஞ்சித், மற்றும் சாந்தனுவோடு நடித்த சக கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பக்கலைஞர்கள் அனைவருக்கும் நன்றிகளைக் கூறி இருந்தார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com