பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் ஹைதராபாத்தில் இயக்குநர் ராம் கோபால் வர்மாவை (ஆர்ஜிவி) நேற்று சந்தித்து பேசினார். இது குறித்து தனது வலைதளத்தில் அமிதாப் பச்சன் கூறியதாவது:
ஹைதராபாத்தில் எனது படப்பிடிப்பின் கடைசி நாளில் மகா புத்திசாலியான ராமு என்கிற ராம் கோபால் வர்மாவை சந்தித்தேன். அவரது எண்ணங்கள், வெளிப்பாடுகள் எல்லாம் மர்மமாகவும் திகைப்பூட்டுவதாகவும் இருக்கின்றன.
மூச்சுவிடாமல் தொடர்ந்து திரைப்படங்களின் கரு குறித்து மிகவும் தனிப்பட்ட அவரது விருப்பு வெறுப்புகளைம், ஏஐ-ஆல் நாம் எங்கு செல்கிறோம்? ஒரு நாளில் என்னவெல்லாம் மாறுகிறது என அதன் புதிர் தன்மைகள் குறித்தும் பேசினார்.
இப்போது இருக்கும் நம்பிக்கையின்மை, பயம், சந்தேகம் எதைக்குறித்தும் கவலைப்படாமல் உண்மையாக, போலித்தனமில்லாமல் பல மணி நேரம் உரையாடினோம். விவாதித்தோம். ஒருவரையொருவர் புகழ்ந்துக்கொண்டோம். ஆனால் இதுதான் இறுதியான உண்மை, சரி என நம்பிக்கையில்லாமல் பேசினோம். பல ஆண்டுகளுக்கு முன்பு பேசியதுபோல எல்லாவற்றை குறித்தும் பேசினோம் என்றார்.
ராம் கோபால் வர்மா, அமிதாப் பச்சன் நெடுநாள் நண்பர்கள். அமிதாப் பச்சனை வைத்து சர்கார் எனும் படத்தினை ஆர்ஜிவி இயக்கியுள்ளார். அமிதாப் தற்போது பிரபாஸின் கல்கி 2898 ஏடி படத்தில் நடித்து வருகிறார். இதில் கமல், தீபிகா படுகோன் என முக்கியமான பிரபலங்கள் நடிக்கிறார்கள்.
பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மா (ஆர்ஜிவி) தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் பல முக்கியமானப் திரைப்படங்களை இயக்கியுள்ளார். தற்போதைய சில முக்கியமான இயக்குநர்களுக்கு முன்னுதாரணமாக ராம் கோபால் வர்மா இருக்கிறார்.
ராம் கோபால் வர்மாவின் சிவா, சத்யா, ரங்கீலா, சர்கார் ஆகிய படங்கள் பெரும் வெற்றி பெற்றன. தற்போது சிறிய அளவிலான படங்களினை இயக்கி வருகிறார்.

ஆந்திர முதல்வர் மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவரான ஜெகன் மோகன் ரெட்டியின் தேர்தல் பயணத்தை மையமாக வைத்து 'வியூகம்' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். வரும் மார்ச் 2ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நடிகர் ரியோ நடித்துள்ள ராம் இன் லீலா அப்டேட்!

ரூ. 300 கோடியை வசூலித்த பெத்தி!
தெலுங்கில் கால் பதிக்கும் கார்த்தி!

முஸ்லிம்கள் மீதான பிம்பத்தை மாற்றும் படம் ஹபீபி! இயக்குநர் ராம்
விடியோக்கள்

மெஸ்ஸியைத் துரத்தும் எம்பாபே! | FIFA | FIFA World Cup | Messi |

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani




