கோபாலபுரம் வீட்டில் எளிமையாக இருந்தவர் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திரையுலகினர் நடத்தும் விழா சென்னை கிண்டி ரேஸ்கோர்ஸில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள், ஆந்திர அமைச்சர் ரோஜ, நடிகர்கள், ரஜினிகாந்த், கமல்ஹாசன், சூர்யா, தனுஷ், நடிகைகள் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
விழாவில் பங்கேற்று பேசிய ரஜினிகாந்த், கலைஞர் குறித்து பேச ஆரம்பித்தால் எங்கு ஆரம்பிப்பது எங்கு முடிப்பது என எனக்கு தெரியாது. அந்தளவிற்கு கலைஞரால் ஈர்க்கப்பட்டவன் நான். கலைஞர் அரசியலுக்கு செல்லாமல் சினிமாவிலேயே இருந்திருந்தால் எத்தனையோ சிவாஜி, எம்ஜிஆரை உருவாக்கி இருப்பார்.
கோபாலபுரம் வீட்டில் எளிமையாக இருந்தவர் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி. 1955ல் தனது சம்பளத்தில் கோபாலபுரம் வீட்டை முன்னாள் முதல்வர் கருணாநிதி வாங்கினார். எழுத்தாளர் ஜெயகாந்தனின் மருத்துவ செலவை ஏற்றவர் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி என்றார்.