இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்மனதின் குரல் நிகழ்ச்சி: வெய்யிலில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தல்!சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்!
/

கடையின் பெயரில் ஒளிபரப்பாகும் இன்னொரு புதிய சீரியல்!

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்கு கிடைத்த வரவேற்பால் தற்போது இத்தொடரின் 2வது பாகம் ஒளிபரப்பாகி வருகிறது.

News image
Updated On :30 ஜனவரி 2024, 3:57 pm IST

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலைத் தொடர்ந்து கடையின் பெயரில் புதிய தொடர் ஒளிபரப்பாகவுள்ளது. 

அந்தத் தொடருக்கு சிவமுருகன் டெக்ஸ்டைல்ஸ் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தத் தொடர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாகவுள்ளது. இதில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள நடிகர் - நடிகைகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. 

விஜய் தொலைக்காட்சியில் அதிக ஆண்டுகள் (5 ஆண்டுகள்) ஒளிபரப்பான சாதனைக்கு உரிய தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். விஜய் தொலைக்காட்சியில் இதுவரை எந்தத்தொடரும் 5 ஆண்டுகள் ஒளிபரப்பானதில்லை என்பதால், இத்தொடர் தனி மதிப்பைப் பெற்றுள்ளது.

Story image

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்கு கிடைத்த வரவேற்பால் தற்போது இத்தொடரின் 2வது பாகம் ஒளிபரப்பாகி வருகிறது. இத்தொடரும் பெரும்பாலான ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. 

இதேபோன்று கடையின் பெயரில் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் அபி டெய்லர்ஸ் என்ற தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. நடிகை ரேஷ்மா முரளிதரன் முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார். 

Story image

இந்நிலையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கடையின் பெயரில் தற்போது புதிய தொடர் ஒளிபரப்பாகவுள்ளது. அந்தத் தொடருக்கு சிவமுருகன் டெக்ஸ்டைல்ஸ் எனப் பெயரிடப்பட்டுள்ளது. 

பெயரை வைத்தே இது துணிக்கடை வைத்திருப்பவர்கள் மற்றும் அதில் பணிபுரிபவர்கள் பற்றிய கதை என்பதை ரசிகர்களால் கணிக்கமுடிகிறது. 

நடிகர் சிபு சூர்யன் - நடிகை வைஷ்ணவி

நடிகர் சிபு சூர்யன் - நடிகை வைஷ்ணவி

இந்தத் தொடரில் நாயகியாக நடிகை வைஷ்ணவி நடிக்கவுள்ளார். இவர் பேரன்பு தொடரில் நாயகியாக நடித்தவர். அவருக்கு ஜோடியாக நடிகர் சிபு சூர்யன் நடிக்கவுள்ளார். இவர் ரோஜா, பாரதி கண்ணம்மா -2 ஆகிய தொடர்களில் நாயகனாக நடித்தவர். 

மகராசி, சில்லுனு ஒரு காதல், ஈரமான ரோஜாவே ஆகிய தொடர்களில் நடித்த நடிகர் நிவின் இவர்களுடன் நடிக்கவுள்ளார். இந்தத் தொடரின் முன்னோட்ட விடியோ மற்றும் ஒளிபரப்பாகும் நேரம் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.