கமிஷன் வாங்குகிறார்கள் தவெக அமைச்சர்கள்; ஆடியோ ஆதாரம் உள்ளது - அண்ணாமலைசோனியா காந்தியை நாட்டு மக்கள் மன்னிக்கமாட்டார்கள்: அமித் ஷா3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு முதல்வர் விஜய் கண்டனம்!தவெக அமைச்சர்கள் கமிஷன் வாங்குகிறார்கள்; ஆடியோ ஆதாரம் உள்ளது - அண்ணாமலைபாஜகவில் இருந்து விலகினார் நடிகர் தேவன் கர்நாடகத்தில் தமிழர்கள் சுட்டுக்கொலை: மு.க. ஸ்டாலின் கண்டனம்! வந்தே மாதரம் பாடலுக்கு அவமதிப்பு! காங். மன்னிப்பு கேட்க வேண்டும்: சுவேந்து அதிகாரி
/

பெண் கதாபாத்திரத்தில் தெலுங்கு நடிகர்! ரெமோ படத்தின் தழுவலா?

தெலுங்கு நடிகர் விஷ்வக் சென் தனது புதிய படத்தில் பெண் கதாபாத்திரத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.

News image

பெண் கதாபாத்திரத்தில் தெலுங்கு நடிகர்.

Updated On :3 ஜூலை 2024, 8:17 pm IST

தெலுங்கு நடிகர் விஷ்வக் சென் தனது புதிய படத்தில் பெண் கதாபாத்திரத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.

ஆந்திரப் பிரதேசத்தில் பிறந்த விஷ்வக் சென் தனது தினேஷ் நாயுடு என்ற பெயரினை ஜோதிடத்தின் பெயரினால் மாற்றிக்கொண்டார். 2017இல் சினிமாவில் நடிகராக அறிமுகமான விஷ்வக் சென் மலையாளத்தில் புகழ்பெற்ற அங்கமாலி டைரிஸ் படத்தினை 2019இல் ரீமேக் செய்தார். இதன் மூலம் இயக்குநராகவும் அறிமுகமானார்.

விஷ்வக் சென் நடிப்பில் ஹிட் தி பர்ஸ்ட் கேஸ், ஒரே தேவுடா, காமி படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன.

இந்தாண்டு வெளியான கேங்ஸ் ஆஃப் கோதாவரி படமும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் லைலா படத்தில் நடித்து வருகிறார். இதன் முதல்பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது. இதில் பெண் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் ஆணாகவும் பெண்ணாகவும் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதல்பார்வை போஸ்டர்

முதல்பார்வை போஸ்டர்

இந்தப் படத்தில் ஆகன்ஷா ஷர்மா நாயகியாக நடிக்கிறார். தமிழில் சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ படத்தின் ரீமேக் போலுள்ளதாக தமிழ் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

ராம் நாராயணன் இயக்கும் இந்தப் படம் அடுத்தாண்டு பிப்ரவரி 14 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.