நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

புதிய தோற்றத்தில் சத்யராஜ்! எந்தப் படத்துக்காக?

புதிய தோற்றத்தில் இருக்கும் நடிகர் சத்யராஜின் புகைப்படம் வெளியாகி சமூக வலைதளத்தில் கவனம் பெற்றுள்ளது.

News image

நடிகர் சத்யராஜ் - படம்: எக்ஸ்

Updated On :3 ஜூலை 2024, 5:47 pm IST

தமிழின் மூத்த நடிகர் சத்யராஜின் புதிய தோற்ற புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இது எந்தப் படத்துக்காக என ரசிகர்கள் குழம்பி வருகிறார்கள்.

நடிகர் சத்யராஜ் தற்போது நாயகனாக நடிக்காமல் சிறந்த கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். பாகுபலி, லவ் டுடே என இவரது கதாபாத்திரங்கள் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளன.

இந்நிலையில் தாடியுடன் கண்ணாடி அணிந்து தலைமுடியை முடித்து வைத்துள்ள புதிய தோற்றம் வெளியாகி இணையத்தில் வைரலாகியுள்ளது.

நடிகர் சத்யராஜ்

நடிகர் சத்யராஜ்

இது ரஜினியின் கூலி படத்துக்காகவா அல்லது சல்மான் கானின் சிக்கந்தர் படத்துக்காகவா என ரசிகர்கள் குழப்பத்தில் இருக்கிறார்கள்.

1980-களில் ரஜினி - சத்யராஜ் இணைந்து பல படங்களில் நடித்தனர். குறிப்பாக, ரஜினிக்கு வில்லனாக சத்யராஜ் நடித்து வந்தார். இருவரின் நடிப்பில் வெளியான ‘மிஸ்டர். பாரத்’ திரைப்படம் பெரிய வெற்றியைப் பெற்றது.

பல மேடைகளில் சத்யராஜ், மறைமுகமாக ரஜினியை தாக்கிப் பேசியிருக்கிறார். 38 ஆண்டுகளுக்குப் பின் ரஜினியுடன் இணைவாரா என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள்.

சல்மானின் சிக்கந்தர் படத்தில் இணைந்ததாக சமீபத்தில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.