சிறகடிக்க ஆசை தொடர் சின்னத்திரையில் தொலைக்காட்சித் தொடர்களில் முதன்மையான தொடர் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.
மிகவும் பிரபலமான நடிகை, நடிகர்கள் நடிக்காமல், கதை மற்றும் கதாபாத்திரங்களின் அடத்தியால் படிப்படியாக சிறகடிக்க ஆசை தொடர் மக்கள் மனங்களைக் கவர்ந்து, தற்போது முதலிடத்தைப் பிடித்துள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் தொடர்கள் இல்லத்தரசிகளை மட்டுமின்றி இளம் தலைமுறையினரையும் கவர்ந்துள்ளது. இதனால், தொடர்களுக்கு சமூகவலைதளத்தில் தனி ரசிகர் பட்டாளமும் உருவாகியுள்ளது.
அந்தவகையில் சிறகடிக்க ஆசை தொடருக்கு சமூக வலைதளங்களிலும் மிகுந்த வரவேற்பு காணப்படுகிறது.

வெற்றி வசந்த், கோமதி பிரியா
விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9 மணிக்கு சிறகடிக்க ஆசை தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.
இத்தொடரில், கோமதி பிரியா, வெற்றி வசந்த் ஆகியோர் முதன்மை பாத்திரத்தில் நடிக்கின்றனர். குரு சம்பத்குமார் திரைக்கதை எழுத எஸ். குமரன் இயக்குகிறார். இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பன திருமதி செல்வம் தொடரை இயக்கியவர்.
சிறகடிக்க ஆசை தொடர் இந்த வாரம் 8.38 புள்ளிகளைப் பெற்று டிஆர்பி பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
இதற்கு முன்பு வரை சன் தொலைக்காட்சியில் கயல், சிங்கப் பெண்ணே ஆகிய இரு தொடர்கள் மட்டுமே முதலிடத்தில் நீடித்து வந்தன. தற்போது அந்த இரு தொடர்களையும் பின்னுக்குத்தள்ளி சிறகடிக்க ஆசை தொடர் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

மீனா பாத்திரத்தில் கோமதி பிரியா
அரிதாரம் இல்லாமல் இயல்பான மக்களின் வாழ்கையை பிரதிபலிக்கும் வகையில் சிறகடிக்க ஆசை தொடரின் முதன்மை பாத்திரங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளதே இத்தொடரின் இயல்பான வெற்றிக்கு காரணம் என்கிறார்கள் சின்னத்திரை ரசிகர்கள்.
தொடர் இந்த வாரம் சிங்கப்பெண்ணே தொடர் டிஆர்பி பட்டியலில் 8.27 புள்ளிகளையும், கயல் தொடர் 8.08 புள்ளிகளையும் பெற்று அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கயல் தொடரின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

சிறகடிக்க ஆசை தொடரில் இணைந்த பிரபல திரைப்பட நடிகர்!

100 நாள்களை நிறைவு செய்த அழகே அழகு தொடர்!

அடுத்தடுத்த படங்களில் நாயகனாக நடிக்கும் சிறகடிக்க ஆசை நடிகர்!
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!




