துணிவு திரைப்படம் வெளியாகி ஓராண்டைக் கடந்த நிலையில், இன்னும் விடாமுயற்சி படப்பிடிப்பிலேயே இருப்பதால் அஜித் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர்.
நடிகர் அஜித் குமார், இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தினை எட்டியுள்ளது.
விடாமுயற்சி படத்திற்குப் பின் நடிகர் அஜித், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடிக்கிறார். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து முடிந்ததாக தகவல்கள் வெளியாகியன. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இதனை தயாரிக்கிறது.
இந்நிலையில் நடிகர் அஜித் மீண்டும் அஜர்பைஜானுக்கு சென்றுள்ளார். அங்கு கிளைமேக்ஸ் காட்சிகள் 35-40 நாள்கள் படமாக்க இருக்கிறதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தப் படத்தில் ஆரவ், ரெஜினா, சஞ்சய் தத், அருண் விஜய், அர்ஜுன் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். தீபாவளிக்கு படத்தினை வெளியிட திட்டமிட்டுள்ளதாக சமீபத்தில் அஜித்தின் மேலாளர் கூறியிருந்தார்.