சின்னத்திரை தொடரில் மீண்டும் நடிகை கௌதமி!
சின்னத்திரை தொடரில் நடிகை கௌதமி மீண்டும் நடிக்கவிருப்பதாக தகவல் தெரியவந்துள்ளது.


சின்னத்திரை தொடரில் நடிகை கௌதமி மீண்டும் நடிக்கவிருப்பதாக தகவல் தெரியவந்துள்ளது.
கோலிவுட்டில் 90 காலகட்டங்களில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் கௌதமி. நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு ஜோடியாகவும் பல படங்களில் நடித்துள்ளார். பின்னர் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த இவர் 2015ல் வெளியான பாபநாசம் திரைப்படத்தின் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்தார்.
அதன் பிறகு தொலைக்காட்சி தொடர்களிலும் அவர் கவனம் செலுத்தினார்.
சினிமாவில் மட்டுமின்றி அரசியலிலும் தனது பயணத்தை தொடர்ந்து வருகிறார் கௌதமி. அண்மையில் அதிமுகவில் இணைந்த இவருக்கு முக்கிய பொறுப்பும் வழங்கப்பட்டது. இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சின்னத்திரை தொடர் ஒன்றில் நடிக்கவிருப்பதாக தகவல் தெரியவந்துள்ளது.
ஜீ தமிழில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நெஞ்சத்தை கிள்ளாதே என்ற தொலைக்காட்சி தொடர்தான் அது.
இதில் நாயகி ரேஷ்மாவின் அம்மாவாக கௌதமி நடிக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது. தற்போது இந்த தகவல் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...