காங்கோவில் திருமண நிகழ்ச்சியில் தீவிபத்து: 22 பேர் பலி சிறப்புத் தீவிர திருத்தம் மூலம் காங்கிரஸ் வாக்குகளை அழிக்க பாஜக சதி: ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டு! திண்டுக்கல் மாணவர்கள் 8 பேர் பலி - முதல்வர் விஜய் இரங்கல் கிரேக்கத்தில் வான் சாகச நிகழ்வில் ஜெட் விமானம் விபத்து! விநாயகர் சிலை- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடுநவ. 1-க்குள் கடைகளுக்கு தமிழில் பெயர்ப் பலகை: உயர்நீதிமன்றம் உத்தரவுமீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு: உள்ளூர் விடுமுறை குறித்து விரைவில் அறிவிப்பு - அமைச்சர் தகவல் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கைதான்: கே.என். நேரு

ரஜினியுடன் நடிப்பது ஜாலியானது: சத்யராஜ்

நடிகர் ரஜினி குறித்து பேசியுள்ளார் சத்யராஜ்...

Published On :21 நவம்பர் 2024, 6:21 pm IST

நடிகர் ரஜினிகாந்த் உடனான கூலி பட அனுபவங்களை நடிகர் சத்யராஜ் பகிர்ந்துள்ளார்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த்தின் 171-வது படமாக கூலி உருவாகிறது. இப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.

படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தை தொடர்ந்து சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படப்பிடிப்பில் நடிகர் அமீர் கான் இணைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்ருதி ஹாசன், சத்யராஜ், உபேந்திரா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

கூலி திரைப்படத்தை அடுத்தாண்டு மே 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் சத்யராஜிடம் கூலியில் ரஜினிகாந்த்துடன் நடித்து வரும் அனுபவம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு சத்யராஜ், “நடிகர் ரஜினிகாந்துடன் நடிப்பது மிகவும் சந்தோஷமானது. பழைய நினைவுகளைப் பேசி அரட்டை அடித்தோம். எனக்கு 70 வயதாகிவிட்டதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டில் இருவரும் செய்யும் உடல் பயிற்சிகள் குறித்தும் பேசுவோம். மேலும், பொதுவான பேச்சுவார்த்தைகளும் இருக்கும்” என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.