பாஜகவில் இணையுமாறு மகனுக்கு மிரட்டல்! அபிஜீத் தீப்கேவின் தாயார் வேதனைதிராவிடர் கழகப் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்!காங்கோவில் 1,500-ஐ கடந்த எபோலா பலி எண்ணிக்கை! ஒரே வாரத்தில் 50% அதிகரிப்பு!வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் பாஜகவின் முயற்சியை கண்டிக்கிறோம்: திருமாவளவன்தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்தடியடிக்கு உத்தரவிட்ட அமித் ஷா பதவி விலக வேண்டும்: மாநிலங்களவையில் கார்கே பேச்சுசிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசு
/

ஜெயிலர் 2 படத்தில் போலீஸாக நடிக்கும் ஷாருக்கான்?

“ஜெயிலர் 2” திரைப்படத்தில் ஷாருக்கான் நடிக்கவுள்ளதாகத் தகவல்...

News image

நடிகர்கள் ஷாருக்கான், ரஜினிகாந்த் - (கோப்புப் படம்)

Updated On :10 மார்ச் 2026, 12:31 pm IST

நடிகர் ரஜினிகாந்தின் “ஜெயிலர் 2” திரைப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் காவல் துறை அதிகாரியாக நடிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் நெல்சன் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் கூட்டணியில், கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் “ஜெயிலர்”. இப்படத்தின் 2 ஆம் பாகம் 2026 ஜூன் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இசையமைப்பாளர் அனிருத் இசையில் உருவாகியுள்ள ஜெயிலர் 2 படத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, மோகன்லால், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இந்தியத் திரையுலகின் முன்னணி நடிகர்கள் இடம்பெற்றுள்ள “ஜெயிலர் 2” படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் காவல் துறை அதிகாரியாக நடிக்கவுள்ளதாகவும், அவர் நடிக்கும் காட்சிகளின் படப்பிடிப்பு இம்மாதம் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெயிலர் 2 படத்தைத் தொடர்ந்து அனிருத் இசையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தை இயக்குநர் நெல்சன் இயக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

It has been reported that Shah Rukh Khan will play a cop in Rajinikanth's "Jailer 2".

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.