மெய்யான சமூக நீதி, நிலையான வளர்ச்சி, வேளாண்மை எழுச்சியே நம் இலக்கு: அண்ணாமலைதவெக அரசு இந்த ஆண்டு ரூ. 85 ஆயிரம் கோடி கடன் வாங்கப்போகிறது : அண்ணாமலைவீ தி லீடர்ஸ் அமைப்பின் இலக்கை 50% எட்டிவிட்டோம்: அண்ணாமலை2026 போல 2031-ல் ஆட்சி மாற்றம் நடக்கும்: அண்ணாமலை உறுதிஎதிர்க்கட்சி தூண்டுதலால் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்! அமைச்சர் விக்னேஷ்பாடகி ஜானகியின் மறைவு வருத்தமளிக்கிறது: ராகுல் காந்தி
/

அமரன் படக்குழுவை பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்!

அமரன் படத்தின் சிறப்புக் காட்சியை பார்த்த முதல்வர் ஸ்டாலின் பாராட்டு.

News image

அமரன் திரைப்படத்தின் சிறப்புக் காட்சியை பார்க்கும் முதல்வர் ஸ்டாலின்.

Updated On :31 அக்டோபர் 2024, 7:01 am IST

நடிகர் சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படத்தை பார்த்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் படக்குழுவினருக்கு பாராட்டு தெரிவித்தார்.

சிவகார்த்திகேயன் தனது 21வது படமாக கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடித்திருக்கிறார்.

அமரன் எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படம் மேஜர் முகுந்த் வரதராஜனின் உண்மை சம்பவத்தின் தழுவலாக உருவாகியுள்ளது.

Story image

இந்த திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வியாழக்கிழமை காலை திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பு திரையிடல் செய்யப்பட்டது.

திரைப்படத்தை பார்த்த முதல்வர் மு.க.ஸ்டாலின், படக்குழுவினருக்கு பாராட்டு தெரிவித்தார்.

இந்த சிறப்பு திரையிடலின்போது, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் தங்கம் தென்னரசு, படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, நடிகர்கள் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.