பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

பின்லாந்தில் சூர்யா - ஜோதிகா: வைரல் விடியோ!

பின்லாந்தில் சூர்யா மற்றும் ஜோதிகா புத்தாண்டை கொண்டாடிய விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Published On :

பின்லாந்தில் சூர்யா மற்றும் ஜோதிகா புத்தாண்டை கொண்டாடிய விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் சூர்யா நடித்து வருகிறார். 'கங்குவா' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். தொடர்ந்து, வெற்றி மாறனின் வாடிவாசல் படத்திலும் சூர்யா நடிக்கவுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, அவரின் 43-வது படத்தை இயக்குநர் சுதா கொங்காரா இயக்குகிறார். மேலும், இப்படத்திற்கு புறநானூறு என்கிற வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளனர். ஆனால் படத்தின் பெயரை இன்னும் அறிவிக்கவில்லை. 

நடிகை ஜோதிகா சமீபத்தில் மம்மூட்டியின் ‘காதல் தி கோர்' என்கிற படத்தில் நடித்திருந்தார். இதைத் தொடர்ந்து, அஜய் தேவ்கன் நடிப்பில் உருவாகும் ‘சைத்தான்’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 

இந்த நிலையில், சூர்யா மற்றும் ஜோதிகா புத்தாண்டை பின்லாந்தில் கொண்டாடியுள்ளனர். உறைபனியில் இருவரும் குடும்பத்துடன் விளையாடி மகிழும் விடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.