மோகன்லால் நடித்த எம்புரான் படத்திற்குத் இடைக்காலத் தடை விதிக்கக் கோரிய மனு மீதான விசாரணையில் கேரள உயர்நீதிமன்றம் மனுவை ரத்து செய்து உத்தரவிட்டது.
மோகன்லால் - பிருத்விராஜ்ஜின் கூட்டணியில் உருவான எம்புரான் திரைப்படம் மார்ச் 27 அன்று திரையரங்குகளில் வெளியானது. லூசிபர் படத்தின் இரண்டாம் பாகமான இந்தப் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
படத்தில் குஜராத் மதக்கலவரத்தைப் போல ஒரு காட்சி இடம்பெற்றிருந்தது. இது, வலதுசாரி அமைப்புகளிடையே விமர்சனங்களை ஏற்படுத்தியது.
இதனால், சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்குவதாக நடிகர் மோகன்லால் தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து, எம்புரான் படத்த்திற்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரி கேரள பாஜகவைச் சேர்ந்த விவி விஜேஷ் கேரள உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.
அந்த மனுவில், “எம்புரான் படத்தில் 2002 குஜராத் கலவரம் பற்றிய காட்சிகள் உள்ளன. பாதுகாப்பு அமைச்சகத்தைப் பற்றி தவறான கருத்துகள் குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய புலனாய்வு அமைப்புகளின் நம்பகத்தன்மையை கேள்விக்கு உட்படுத்தும் வகையில் காட்சிகளை சித்தரிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படம் வகுப்புவாத கலவரத்தைத் தூண்டும். எனவே அதுபோன்ற கலவரம் ஏற்படுவதைத் தவிர்க்க எம்புரான் படத்திற்கு தடை விதிக்கவேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி சிஎஸ் தியஸ், எம்புரான் திரைப்படம் வகுப்புவாதக் கலவரத்தைத் தூண்டும் விதமாக உள்ளதா என்றும், பாஜக உறுப்பினரின் மனுவின் மீதான நிலைப்பாட்டைத் தெரிவிக்குமாறும் மத்திய அரசு மற்றும் தணிக்கை வாரியத்திற்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டார்.
மேலும், ”மனுதாரர் விளம்பர நோக்கத்திற்காக இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளதாக சந்தேகம் எழுகின்றது. தணிக்கை வாரியம் அனுமதி கொடுத்து மக்களின் பார்வைக்கு வந்த படத்தின் மீது உங்களுக்கு என்ன பிரச்னை?” என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.
பின்னர், எம்புரான் படத்திற்கு இடைக்காலத் தடை விதிப்பதற்கு மறுப்பு தெரிவித்து நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த நிலையில், படத்திலிருந்து மேலும் 2 நிமிடக் காட்சிகள் நீக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்த தயாரிப்பு நிறுவனம், யாருக்கும் பயந்து இதனைச் செய்யவில்லை என்று கூறியுள்ளது.
இதையும் படிக்க | எம்புரான் 3 நிமிட காட்சிகள் நீக்கம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விதி மீறிய குவாரிகள் விவகாரம்: அரசாணைக்கு இடைக்காலத் தடை

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: குற்றவாளிகளின் தண்டனையை உறுதிப்படுத்தக் கோரிய மனு மீதான விசாரணை மீண்டும் ஒத்திவைப்பு

திருப்பத்தூா் மாவட்டப் பதிவாளா் பணியிடை நீக்க உத்தரவுக்கு இடைக்காலத் தடை

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: குற்றவாளிகளுக்கு தண்டனையை உறுதி செய்ய கோரிய மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



