தமிழகம் முழுவதும் நாளை குடற்புழு தொற்று தடுப்பு மாத்திரை வழங்கும் சிறப்பு முகாம்சுதந்திர தின பாதுகாப்பு! பல இடங்களில் பயங்கரவாத எதிா்ப்பு ஒத்திகையில் ஈடுபட்ட என்எஸ்ஜி!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு புதுச்சேரியில் அரசு விழாவில் அமித் ஷா இன்று பங்கேற்பு! மதுக் கடைகளை மூட உத்தரவு!கடந்த 6 மாதங்களில் 3,323 இந்தியா்களை நாடு கடத்திய கனடா!சென்னை உயா்நீதிமன்ற புதிய நீதிபதிகள் இன்று பதவியேற்பு
/

எம்புரானில் நடித்த இந்த நடிகர் யார் தெரியுமா?

எம்புரானில் அறிமுகமான நடிகர் குறித்து....

News image
Updated On :5 ஏப்ரல் 2025, 8:06 pm IST

எம்புரானில் அறிமுகமான நடிகர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

லூசிஃபர் படத்தின் இரண்டாம் பாகமான எம்புரான் படம் வெளியான நாள்முதல் சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாமல் விமர்சனங்களைச் சந்தித்தாலும் ரூ. 250 கோடிக்கும் மேல் வசூலித்து மலையாளத்தின் அதிக வசூலித்த படம் என்கிற சாதனையை அடைந்துள்ளது.

அதேநேரம், சர்ச்சையை ஏற்படுத்தியதாகக் கருதப்பட்ட சில காட்சிகளை நீக்கியதுடன் 17 இடங்களில் கட் செய்துள்ளதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

படத்தின் மீதான சர்ச்சைகளும் விமர்சனங்களும் ஒருபுறம் இருந்தாலும் எம்புரானில் ஒரு காட்சியில் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமில்லாத ஒருவர் திடீரென வந்து சென்றார்.

சின்ன கதாபாத்திரத்திற்கு எதற்கு பின்னணி இசை? ஸ்லோமோஷன் ஷாட் என ரசிகர்கள் குழம்பினர்.

ஆனால், அந்த நடிகர் யாரோ ஒரு அறிமுக நடிகர் இல்லை. அவர் தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூரின் மகன் ஆஷிஷ் ஜோ ஆண்டனி. இந்தப் படத்தின் மூலமே சினிமாவில் நடிகராக அறிமுகமாகியுள்ளார்.

எம்புரானில் ஆண்டனி பெரும்பாவூரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அதே படத்தில் தன் மகனையும் அவர் அறிமுகப்படுத்தியுள்ளது ரசிகர்களிடையே ஆவலை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.