நடிகர் சூர்யாவின் ரெட்ரோ திரைப்படத்துக்கான டிக்கெட்கள் அதிகளவில் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பதாக அறிவிப்பு வெளியானதிலிருந்தே ரெட்ரோ திரைப்படத்தின் மீதான ஆவல்கள் அதிகரித்தபடியே இருந்தன.
கடந்தாண்டு துவங்கிய படப்பிடிப்பு அந்தமான், ஊட்டி உள்பட பல பகுதிகளில் நடைபெற்று முடிந்தது. ஆனால், படப்பிடிப்பு முடிந்தும் சில மாதங்கள் வரை படத்தின் வெளியீட்டுக்கு காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
இறுதியாக, இப்படம் நாளை (மே. 1) வெளியாகிறது. கங்குவா படத்தின் தோல்வியிலிருந்து சூர்யா மீண்டு வர வேண்டும் என்பதற்காக அவரின் ரசிகர்கள் இப்படத்திற்காகக் காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில், ஆன்லைன் வாயிலாக படத்திற்கான டிக்கெட் முன்பதிவுகள் அதிக அளவில் விற்பனையாகியுள்ளன. சென்னை உள்பட பல நகரங்களில் முதல் நாள் காட்சிகள் பெரும்பாலும் ஹவுஸ்புல் ஆகியுள்ளதால் படம் நன்றாக இருந்தால் அதிக வசூலை ஈட்டவும் வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: ரூ. 18 கோடியாக சம்பளத்தை உயர்த்திய நயன்தாரா?