ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

பீக்கி பிளைண்டர்ஸ் படத்தின் பெயர், வெளியீட்டுத் தேதி!

பிரபல பீக்கி பிளைண்டர்ஸ் தொடர்களை மையமாகக் கொண்ட திரைப்படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது...

Published On :

பிரபல பீக்கி பிளைண்டர்ஸ் இணையத் தொடர்களின் கதையை மையமாகக் கொண்டு உருவாகும் புதிய திரைப்படத்தின் பெயர் மற்றும் வெளியீட்டுத் தேதியை நெட்பிளிக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

பிரிட்டனைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் ஸ்டீவன் நைட் எழுதிய கதைகளின் அடிப்படையில் உருவான பீக்கி பிளைண்டர்ஸ் இணையத் தொடர்களுக்கு உலகம் முழுவதும் மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் உண்டு.

இந்த நிலையில், முதலாம் உலகப் போருக்குப் பின் பிரிட்டனில் நடைபெறும் வரலாற்று கதைகளத்துடன் கூடிய பீக்கி பிளைண்டர்ஸ் இணையத் தொடர்களின் அடிப்படையில் உருவாகும் புதிய திரைப்படத்திற்கு “தி இம்மோர்டல் மேன்” எனப் பெயரிடப்பட்டுள்ளது.

பீக்கி பிளைண்டர்ஸ் இணையத் தொடரின் நாயகனான ஆஸ்கர் விருது வென்ற நடிகர் சிலியன் மர்ஃபியின் நடிப்பில் இப்படம் உருவாகியுள்ளது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இதனைத் தொடர்ந்து, வரும் 2026 ஆம் ஆண்டு மார்ச் 6 ஆம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்ட திரையரங்குகளில் மட்டுமே வெளியாகும் “தி இம்மோர்டல் மேன்” திரைப்படம் மார்ச் 20 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Summary

Netflix has announced the title and release date of a new film based on the popular Peaky Blinders web series.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.