காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

திரைத்துறையில் 20 ஆண்டுகள்... ரெஜினா கேசண்ட்ராவுக்கு இன்ப அதிர்ச்சி!

நடிகை ரெஜினாவின் திரைப் பயணத்திற்கான பாராட்டு குறித்து...

Regina Cassandra got emotional as her 20-year journey was honoured at the Democratic Sangha Annual Forum

கேக் வெட்டி கொண்டாடிய ரெஜினா. - படம்: இன்ஸ்டா / ரெஜினா கேசண்ட்ரா.

Published On :

நடிகை ரெஜினா கேசண்ட்ராவின் 20 ஆண்டுகால திரைப் பயணத்தைக் கொண்டாடும் வகையில் டெமோக்ரடிக் சங்கா கேக் வெட்டி கொண்டாடியது.

நடிகை ரெஜினாவுக்கு முன்னமே தெரிவிக்காமல் திடீரென இன்ப அதிர்ச்சியாக செய்ததால் அவர் மிகவும் அகம் மகிழ்ந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

சென்னையைச் சேர்ந்த நடிகை ரெஜினா கேசண்ட்ரா முதன்முதலாக கண்ட நாள் முதல் எனும் தமிழ் படத்தில் நடித்திருந்தார்.

இந்தப் படம் 2005-இல் நவ.18ஆம் தேதி வெளியாகியது. அடுத்து கேடி பில்லா கில்லாடி ரங்கா என்ற படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது.

தமிழ், தெலுங்கில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் இவர் ஹிந்தி திரைப்படத்திலும் கவனம் செலுத்தி வருகிறார்.

கடந்த நவம்பர் 18இல் ரெஜினா இந்த 20 ஆண்டுகளை நிறைவு செய்திருந்தார்.

டெமோக்ரடிக் சங்காவின் வருடாந்திர விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்ட ரெஜினாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் அந்த நிறுவனம் கேக் வெட்டி அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தது.

தற்போது, மூக்குத்தி அம்மன் -2 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

Summary

Regina Cassandra got emotional as her 20-year journey was honoured at the Democratic Sangha Annual Forum

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.