எல் நினோவையும் தாண்டி சர்ப்ரைஸ் கொடுத்த ஜூலை மாத மழைப்பொழிவு!முதல்வர் விஜய் கர்நாடகம் வர வேண்டாம்! டி.கே. சிவகுமார் வேண்டுகோள்!காவிரி ஆணைய உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு! டி.கே. சிவகுமார் அறிவிப்பு! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்!மகாராஷ்டிரத்தில் அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் 9 பேர் பலி; மீட்புப் பணிகள் தீவிரம் மஞ்சள், சிவப்பு! தவெக கொடி நிறத்துக்கு மாறிய டிஎன்எஸ்டிசி செயலி!
/

விஜய்யுடன் போட்டி உறுதி... புதிய வெளியீட்டுத் தேதியை அறிவித்த பராசக்தி படக்குழு!

பராசக்தி திரைப்படத்தின் புதிய வெளியீட்டுத் தேதி குறித்து...

News image

பராசக்தி, ஜன நாயகன் போஸ்டர்கள். - படங்கள்: எக்ஸ் / டாவ்ன் பிக்சர்ஸ், அகிம்சா என்டர்டெயின்மென்ட்ஸ்.

Updated On :22 டிசம்பர் 2025, 7:04 pm IST

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள பராசக்தி திரைப்படத்தின் புதிய வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

வதந்திகள் எனக் கூறப்பட்டு வந்த நிலையில், தற்போதைய இந்த அறிவிப்பு விஜய்யுடன் போட்டிதான் என்பதை உறுதிசெய்வதாக அமைந்துள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குநர் சுதா கொங்காரா கூட்டணியில் பராசக்தி என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் ரவி மோகன், அதர்வா மற்றும் ஸ்ரீ லீலா உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மொழிப்போர் காலங்களில் மதராஸ் மாகாணத்தில் நடைபெற்ற ஹிந்தி திணிப்பு போராட்டத்தை மையப்படுத்தி உருவாகியுள்ளது.

இந்தப் படம் தொடக்கத்தில் ஜன.14ஆம் தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, ஜன.10ஆம் தேதி வெளியாகுமென புரோமோவை வெளியிட்டுள்ளது.

நடிகர் விஜய்யின் கடைசியான திரைப்படமாக உருவாகியுள்ள ஜன நாயகன் ஜன.9ஆம் தேதி வெளியாகிறது குறிப்பிடத்தக்கது.

Summary

A clash with Vijay is confirmed... The Parasakthi film crew has announced a new release date!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.