12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

விஜய் குரலில்..! ஜன நாயகனின் செல்ல மகளே பாடல்!

ஜன நாயகன் திரைப்படத்தின் “செல்ல மகளே” பாடல் வெளியாகியுள்ளது...

Published On :

நடிகர் விஜய்யின் ஜன நாயகன் திரைப்படத்தின் “செல்ல மகளே” எனும் பாடல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் ஹெச். வினோத் கூட்டணியில் உருவாகியுள்ள ஜன நாயகன் திரைப்படம் வரும் ஜன.9 ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகின்றது.

நடிகர் விஜய்யின் அரசியல் வருகையால், அவர் நாயகனாக நடிக்கும் கடைசி திரைப்படம் எனக் கருதப்படும் ‘ஜன நாயகன்’ படத்தில் நடிகர்கள் பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரகாஷ் ராஜ் மற்றும் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இசையமைப்பாளர் அனிருத் இசையில் உருவாகும் இந்தப் படத்தின் “தளபதி கச்சேரி” மற்றும் “ஒரு பேரே வரலாறு” ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றன.

இந்த நிலையில், “ஜன நாயகன்” படத்தின் 3 ஆவது பாடலான “செல்ல மகளே” எனும் பாடல் இன்று (டிச. 26) வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் பாடியுள்ள இந்தப் பாடலின் வரிகளை பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார்.

இத்துடன், ஜன நாயகன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை (டிச. 27) மலேசியா நாட்டின் கோலாலம்பூரில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

The song "Chella Magale" from actor Vijay's film 'Jana nayagan' has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.