25 ஆண்டுகள்.. தொடரும் துயரம்! 9/11 குற்றவாளிகளின் வீட்டு மேலாளர் வெளியிட்ட தகவல்! தேசிய விளையாட்டு நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா விலகல்!நேபாள வெள்ளம்! காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரிப்பு! பாகிஸ்தான் சென்றாரா விஜய்? பொய் செய்தி பரப்புவதில் சாதனை படைக்கும் தவெக! ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டுசூட்கேஸ், பிரியாணி டபராவில் மனித உடல்! 2வது குற்றவாளியும் கைது! தலை எங்கே? கொலை நடந்தது ஏன்?

ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா! எந்தெந்தப் பொருள்களுக்குத் தடை?

விஜய்யின் ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்குக் கொண்டு செல்லக்கூடாத பொருள்களின் பட்டியல்

Published On :26 டிசம்பர் 2025, 3:03 pm IST

நடிகர் விஜய்யின் ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்குக் கொண்டு செல்லக்கூடாத பொருள்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

மலேசியாவில் நாளை (டிச. 27) நடைபெறவுள்ள ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில், அரசியல் பேச்சு மற்றும் விமர்சனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, பல்வேறு வகையான பொருள்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறியீடுகள், கூறுகள் அல்லது ஏதோவொரு வடிவத்தில் அரசியலைக் குறிப்பதாய் இருக்கும் டி-சர்ட், விசிறி, தலைப்பாகை, பேட்ஜ், குடை, கொடி, போஸ்டர் என எதுவாக இருந்தாலும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அல்லது பாதுகாவலர்களால் பறிமுதல் செய்யப்படும்.

மேலும், உணவுப்பொருள்கள், மது வகைகள், கேமராக்கள், ட்ரோன், ஹீலியம் பலூன்கள், ஸ்கேட்போர்டு, ஸ்டிக்கர்ஸ், இசைப்பான்கள், கண்ணாடிப் பொருள்கள், வளர்ப்புப் பிராணிகள், ஆயுதங்கள், வெடிபொருள்கள், பந்து போன்ற பலவகையான பொருள்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

விஜய்யின் கடைசிப் படம் என்பதால், ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவுக்கு பல்வேறு சினிமா பிரபலங்களும் ரசிகர்களும் செல்கின்றனர்.

Summary

Prohibited things in Vijay's Jana nayagan audio launch

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.