சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

மறுவெளியீடான பத்மாவத்..!அலாவுதீன் கில்ஜி கதாபாத்திரம் குறித்து பேசிய ரன்வீர் சிங்!

பத்மாவத் படத்தின் மறுவெளியீட்டில் கில்ஜி கதாபாத்திரம் குறித்து ரன்வீர் சிங் பேசியதாவது...

News image

பத்மாவத் படத்தின் போஸ்டர், ரன்வீர் சிங்.

Updated On :6 பிப்ரவரி 2025, 4:05 pm IST

தீபிகா படுகோன், ரன்வீர் சிங், ஷாகித் கபூர் நடிப்பில் 2018இல் பத்மாவத் (தமிழில் பத்மாவதி) படம் வெளியானது. தற்போது, இந்தப் படம் மறுவெளியீடாகியுள்ளது.

இந்தப் படத்தை பிரபல ஹிந்தி இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியிருந்தார். இந்தப் படத்துக்கு வட மாநிலங்களில் பல எதிர்ப்புகள் கிளம்பி அறிவிக்கப்பட்ட தேதியில் இருந்து தாமதமாக வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

பத்மாவத் போஸ்டர்.

பத்மாவத் போஸ்டர்.

கி.பி.1303ஆம் ஆண்டில் இருந்த ராணி பத்மாவதியின் கதாபாத்திரத்தில் நடிகை தீபிகா படுகோன் சிறப்பாக நடித்திருந்தார்.

சித்தூர் ராணி பத்மினியின் அழகில் மயங்கிய அலாவுதீன் கில்ஜி, அவளைக் கவர நினைத்து சித்தூரின் மீது படையெடுத்து கோட்டையை முற்றுகை இட்ட நிலையில் ராணி பத்மினி, தனது அந்தப்புரத்துப் பெண்கள் அனைவருடனும் கில்ஜியின் கண் முன்னே நெருப்பில் பாய்ந்து உயிரை மாய்த்துக்கொள்வதுதான் கதை.

அலாவுதீன் கில்ஜி கதாபாத்திரத்தில் ரன்வீர் சிங் அசத்தியிருந்தார். கடினமான ஒரு வரலாற்று கதாபாத்திரத்தை அதன் தீவிரத் தன்மைக் குறையாமல் நடிக்க கடினமாக உழைத்ததாகக் கூறியுள்ளார்.

கதைதான் எனக்கு புத்தகம்

ரன்வீர் சிங் கூறியதாவது:

நடிகரான நான் திரைக்கதைக்கு உண்மையாக இருக்க வேண்டும். திரைக்கதையை நான் பாடப்புத்தகமாக கருதுகிறேன். என்ன எழுதி இருக்கிறதோ அதில் இருந்துதான் நான் குறிப்புகளை அதிகமாக எடுத்துக்கொள்கிறேன்.

உண்மையை சொல்ல வேண்டுமானால், கில்ஜி கதாபாத்திரத்தில் நான் இன்னமும் தீவிரமான, உணர்ச்சிகளை அதிகம் வெளிப்படுத்தும்படி நடிக்க விரும்பினேன். இயக்குநர் பன்சாலி கில்ஜி கதாபாத்திரத்துக்காக என்னை சிறப்பாக வடிவமைத்தார் என்றார்.

கடைசியாக ரன்வீர் சிங் ‘சிங்கம் அகெய்ன்’ படத்தில் நடித்திருந்தார். இதற்கடுத்து துரந்தார் எனும் படத்தில் நடித்து வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.