தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை குஜராத்தில் மரம் நடுவதில் சாதனை... அன்னையின் பெயரில் ஒரு மரம் நடுங்கள் - பிரதமர் மோடி வேண்டுகோள் உலகளவில் கவனம்பெறும் உ.பி. பெண்களின் மூலிகை தேநீர்! மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த அனுமதி அளித்தது யார்? அமித் ஷாவுக்கு ராகுல் கேள்விமத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!
/

குட் பேட் அக்லிதான் ஒரே நம்பிக்கை... புலம்பும் அஜித் ரசிகர்கள்!

விடாமுயற்சியால் அஜித் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்....

News image
Updated On :8 பிப்ரவரி 2025, 8:30 pm IST

விடாமுயற்சி திரைப்படம் ஏமாற்றத்தை அளித்ததாக அஜித் ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித், த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா நடிப்பில் விடாமுயற்சி திரைப்படம் பிப்.6 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.

ஆக்சன் திரில்லர் கதையாக உருவான இதில் மாஸ் ஹீரோவாக காட்டிக்கொள்ளமால் சாதாரண கதாபாத்திரத்தில் அஜித் நடித்திருந்தார். கதையாக அவருக்கு நல்ல படமாக அமைந்தாலும் ரசிகர்களிடம் விடாமுயற்சி அதிருப்தியை அளித்துள்ளது.

விசில் அடித்து கொண்டாடக்கூடிய வகையான படத்திலேயே அஜித்தை பார்த்த அவரின் ரசிகர்கள், விடாமுயற்சியில் புல்லரிக்கும் வசனங்களும் சண்டைக்காட்சிகளும் இல்லாததால் கடும் ஏமாற்றத்தில் இருக்கின்றனர்.

படத்தின் மீது எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பாருங்கள் என இயக்குநர் நேர்காணலில் கூறியிருந்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் ரசிகர்களுக்கு திருப்தியான படமாக இல்லை என்றே பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

முக்கியமாக, வசூலிலும் இப்படம் துணிவின் முதல்நாள் வசூலைவிட குறைவாக வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், அஜித் ரசிகர்கள் தயாரிப்பு நிறுவனத்தையும் இயக்குநரையும் சமூக வலைதளங்களில் விமர்சித்து பதிவிட்டுள்ளனர்.

மேலும், குட் பேட் அக்லி படம்தான் அஜித்தின் படமாகவும் ரசிகர்களுக்கான படமாகவும் இருக்கும் என புலம்பி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.