ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

ராம் கோபால் வர்மா எழுத்தில் புதிய படம்! டிரைலர் வெளியீடு!

இயக்குநர் ராம் கோபால் வர்மா எழுத்தில் புதிய படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

சத்யா யது, ஆராதயா தேவி - படங்கள்: யூடியூப் /ஆர்ஜிவி.

Published On :

இயக்குநர் ராம் கோபால் வர்மா எழுத்தில் புதிய படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

சைக்கோ த்ரில்லர் படமாக உருவாகியுள்ள ‘சாரீ’ படத்தின் கதையை ராம் கோபால் வர்மா எழுதியுள்ளார். இந்தப் படத்தினை கிரி கிருஷ்ண கமல் இயக்கியுள்ளார்.

தெலுங்கு, ஹிந்தி சினிமாக்களில் புதிய புரட்சியை உண்டாக்கியவராக அறியப்படும் ராம் கோபால் வர்மா தற்போது படங்கள் எதுவும் இயக்காமல் வணிகத்துக்காக யூடியூப்பில் குறும்படங்களை இயக்கி வருகிறார்.

அடிக்கடி சர்ச்சை கருத்துகளைக் கூறி பிரச்னையில் சிக்குவதும் அவருக்கு வழக்கமானது என்பது குறிப்பிடத்தக்கது.

Story image

இந்தப் படத்தினை ஆர்ஜிவி ஆர்வி புரடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ளது. ராம் கோபால் வர்மா இந்தப் படத்தினை வழங்கியுள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் ஆர்ஜிவி கூறியதாவது:

இந்தப் படம் சமூக வலைதளத்தினால் உண்டாகும் அபாயத்தைப் பற்றியது. அப்பாவியான தொடர்புகள் எப்படி பயங்கரமான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதைப் பற்றிய படம். ஹிந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளத்தில் பிப்.28ஆம் தேதி வெளியாகிறது எனக் கூறியுள்ளார்.

ஆராதயா தேவி, சத்யா யது, சாஹில் சம்பயல், அப்பாஜி அம்பரிஷ், கல்பலதா நடித்துள்ளார்கள். சபரி ஒளிப்பதிவில் ஆனந்த் இசையமைத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.