தேசிய விருது வென்ற இயக்குநர் சேரனின் ஆட்டோகிராஃப் திரைப்படம் 21 ஆண்டுகள் கழித்து மறுவெளியீடு செய்யப்படவுள்ளது.
பாரதி கண்ணம்மா, பாண்டவர் பூமி, வெற்றிக் கொடிகட்டு, தவமாய் தவமிருந்து போன்ற பல வெற்றிப் படங்களை இயக்கியவர் இயக்குநர் சேரன். இவர் சொந்தமாகத் தயாரித்து, இயக்கி, நடித்தத் திரைப்படம் ‘ஆட்டோகிராஃப்’. இந்தப் படத்தில் சினேகா, கோபிகா, மல்லிகா, கனிகா, இளவரசு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் சிறந்த பொழுதுபோக்குத் திரைப்படம், சிறந்த பிண்ணனிப் பாடகர் (சித்ரா - ஒவ்வொருப் பூக்களுமே), சிறந்த பாடலாசிரியர் (பா. விஜய் - ஒவ்வொருப் பூக்களுமே) உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் தேசிய விருதுகளை வென்றது.
இதையும் படிக்க | சப்தம் படத்தின் டிரைலர் வெளியானது!
ஆட்டோகிராஃப் படத்தில் விளம்பரப் பட நிறுவனத்தை நடத்தும் சேரன் தனது உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் திருமண அழைப்பிதழ் கொடுக்க ஊருக்குச் செல்வார். அப்போது தனது கடந்த கால நண்பர்கள், தான் காதலித்த மூன்று பெண்களைச் சந்திக்கும் அவர் தனது வாழ்வின் பழைய நினைவுகளுக்குள் செல்வதாக இந்தப் படத்தின் கதை நகரும்.
படம் வெளியான சமயத்தில் பெரிய வெற்றியைப் பெற்றது. படத்தின் வெற்றிக்குப் பரத்வாஜ் இசையில் உருவான பாடல்களும் முக்கியக் காரணமாக இருந்தன. அனைத்துப் பாடல்களும் இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்படுகின்றன.
இந்த நிலையில், 21 ஆண்டுகள் கழித்து ஆட்டோகிராஃப் திரைப்படம் விரைவில் மறுவெளியீடு செய்யப்படவுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. இதனை சேரன் தனது சமூக வலைதளப் பக்கங்களில் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஆட்டோகிராஃப் படத்தின் மறுவெளியீட்டுத் தேதி குறிப்பிடப்படாமல் ஏஐ தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட புதிய டிரைலர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
இந்தப் படத்தை திரையரங்கில் ரசிக்க ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மறுவெளியீடாகும் மணிரத்னத்தின் இதயத்தை திருடாதே!

என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்டின் கதையை இயக்கும் ராம் கோபால் வர்மா!

இதயம் முரளி! இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! (ஆக. 7 - 13)

பாரம்பரியக் கலைகளுடன் மனித உணர்வுகள் கொப்புளிக்கும் இயக்குநர் பாலாவின் தாரை தப்பட்டை!
விடியோக்கள்
ரசிகர்களைக் கவர்ந்ததா மகுடம்? திரைவிமர்சனம்



