ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

குட் பேட் அக்லியில் சிம்ரன்!

நடிகை சிம்ரன் குட் பேட் அக்லியில் நடித்துள்ளதாகத் தகவல்...

Published On :19 பிப்ரவரி 2025, 1:20 pm IST

நடிகை சிம்ரன் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் ’குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. காரணம், இதில் அஜித் மூன்று வெவ்வேறு தோற்றங்களில் நடித்துள்ளார்.

அஜித்துடன் த்ரிஷா, அர்ஜுன் தாஸ் மற்றும் யோகி பாபு உள்ளிட்ட நடிகர்களும் நடித்துள்ளனர்.

இப்படம் பொங்கல் வெளியீடாக திரைக்கு வரவிருந்தது. ஆனால், விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டதால் ஏப். 10 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதையும் படிக்க: சுழல் - 2 டிரைலர்!

தற்போது, குட் பேட் அக்லி திரைப்படம் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருப்பதாகவும், அஜித் நடிக்கவேண்டிய பகுதிகள் முடிந்து அவர் இல்லாத சில காட்சிகள் மட்டும் படமாக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், குட் பேட் அக்லியில் சிறப்பு தோற்றத்தில் நடிகை சிம்ரன் நடித்துள்ளதாகவும் வாலி படத்தை நினைவுப்படுத்தும் காட்சி ஒன்று இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இறுதியாக, 2000-ல் வெளியான உன்னைக் கொடு என்னை தருவேன் படத்தில் அஜித் - சிம்ரன் இணைந்து நடித்திருந்தனர். தற்போது, 25 ஆண்டுகளுக்குப் பின் இவர்கள் திரையில் தோன்றவுள்ள தகவல் ரசிகர்களிடம் ஆவலை அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.