சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை: முதல்வா் இன்று தொடக்கி வைக்கிறாா்தமிழகத்தில் ஜூன் 13 வரை மழைக்கு வாய்ப்பு!ரூ. 397 கோடி மின்மாற்றி முறைகேடு: சிபிஐ வழக்குப் பதிவுஇஸ்ரேல் - ஈரான் இடையே மீண்டும் மோதல்!
/

வேள்பாரி நாவலைத் திரைப்படமாக்குவதுதான் என் கனவு: ஷங்கர்

வேள்பாரி நாவல் குறித்து ஷங்கர் பேசியுள்ளார்...

News image

ஷங்கர்

Updated On :13 ஜூலை 2025, 1:24 pm IST

இயக்குநர் ஷங்கர் வேள்பாரி நாவலைத் திரைப்படமாக்குவது குறித்து பேசியுள்ளார்.

இயக்குநர் ஷங்கரின் இந்தியன் - 2 திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வசூலில் தோல்வியடைந்தது. இதனால், ஒட்டுமொத்த படக்குழுவினரும் அதிருப்தியடைந்தனர்.

அடுத்ததாக, கேம் சேஞ்சர் மற்றும் இந்தியன் - 3 படங்களில் கவனம் செலுத்தி வந்தார். இதில், ராம் சரண் நடிப்பில் வெளியான கேம் சேஞ்சர் திரைப்படம் படுதோல்வியைச் சந்தித்து ஷங்கர் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன. அடுத்ததாக, வேள்பாரி நாவலைத் திரைப்படமாக்கும் பணிகளைத் துவங்கியுள்ளார்.

இந்த நிலையில், எம்பியும் எழுத்தாளருமான சு. வெங்கடேசன் எழுதிய வேள்பாரி நாவல் ஒரு லட்சம் பிரதிகள் விற்பனையானதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் ஷங்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் பேசிய ஷங்கர், “முதலில் என் கனவுப்படமாக இருந்தது எந்திரன். இப்போது, என் கனவு வேள்பாரி. காட்சிகளாக, கதாபாத்திரங்களாக, சம்பவங்களாக புதுப்புது தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தக்கூடிய கதையாக இருப்பதுடன் கேம் ஆஃப் த்ரோன்ஸ், அவதார் மாதிரி உலகளவில் பிரபலமாகக்கூடிய தமிழ்ப் படமாக உருவாகும் சாத்தியமும் வேள்பாரிக்கு இருக்கிறது. கனவு நனவாகட்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.

director shankar spokes about velpari novel.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.