இயக்குநர் விக்ரம் சுகுமாரன் காலமானார்!

'மதயானைக் கூட்டம்’ திரைப்படத்தின் இயக்குநர் விக்ரம் சுகுமாரன் மாரடைப்பால் காலமானார்.
இயக்குநர் விக்ரம் சுகுமாரன்
இயக்குநர் விக்ரம் சுகுமாரன்எக்ஸ்
Published on
Updated on
1 min read

பிரபல தமிழ் திரைப்பட இயக்குநர் விக்ரம் சுகுமாரன் காலமானார்.

தமிழ் திரைப்பட இயக்குநரும், நடிகருமான விக்ரம் சுகுமாரன் நேற்று (ஜூன் 1) இரவு மாரடைப்பால் காலமானார். இவர் ‘மதயானைக் கூட்டம்’, ‘இராவண கோட்டம்’ ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

இந்நிலையில், அவரது மறைவுக்கு, இராணவ கோட்டம் திரைப்படத்தின் கதாநாயகனான நடிகர் சாந்தனு, தமது எக்ஸ் தளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, விக்ரம் சுகுமாரன் ’பொல்லாதவன்’, ’கொடிவீரன்’ ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும், தேசிய விருதுகளை வென்ற ‘ஆடுகளம்’ படத்துக்கு இயக்குநர் வெற்றிமாறனுடன் இணைந்து அவர் வசனம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ஓராண்டுக்குப் பிறகு ஓடிடியில் லால் சலாம்..! நீண்ட காத்திருப்புக்கு முடிவு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com