இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!
இயக்குநரும், தயாரிப்பாளருமான தக்காளி சீனிவாசன் உடல்நலக்குறைவால் செவ்வாய்க்கிழமை காலமானார்.


இயக்குநரும், தயாரிப்பாளருமான தக்காளி சீனிவாசன் உடல்நலக்குறைவால் பெங்களூரில் செவ்வாய்க்கிழமை (மார்ச் 10) காலமானார்.
1980 காலகட்டத்தில் தமிழ்த்திரையுலகில் இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் எனப் பன்முகத்தன்மை கொண்ட தக்காளி சீனிவாசன் இசையமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.
திகில் மற்றும் கொலைக் குற்றங்கள் தொடர்பான மர்மக்கதைகளை தயாரித்து பிரபலமான தக்காளி சீனிவாசன் இவர்கள் வருங்காலத் தூண்கள், மனசுக்குள் மத்தாப்பு, நாளைய மனிதன், அதிசய மனிதன் போன்ற படங்களைத் தயாரித்துள்ளார்.
இவர் ஜென்ம நட்சத்திரம், விட்னஸ், அசோகவனம் உள்ளிட்ட திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். நாளைய மனிதன், அதிசய மனிதன், ஜென்ம நட்சத்திரம், ஃபிட்னஸ் உள்ளிட்ட சில படங்களுக்கு இசையமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.
கமல்ஹாசனின் சூரசம்ஹாரம் உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ள சீனிவாசன் உடல்நலக்குறைவால் மறைந்ததைத் தொடர்ந்து திரையுலகினரும், ரசிகர்களும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இவரது இறுதிச் சடங்குகள் நாளை (மார்ச் 11) பெங்களூரில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...