சட்டப்பேரவையில் இன்று விவாதம் இருக்காது: ஜேசிடி பிரபாகர்சென்னையில் அமைச்சர் ஜெகதீஸ்வரி கார் மோதி இளைஞர் பலி; ஓட்டுநர் கைதுஅத்தியாவசியப் பொருள்கள் விலை உயர்வு: இல்லத்தரசிகள் கவலை!சென்னை உள்பட 17 நகரங்களுக்கு 4,000 டன் வெங்காயம் விநியோகம்!15.36 கோடி ஜன்தன் வங்கிக் கணக்குகள் செயல்படவில்லை: ஆர்டிஐ தகவல்இந்தியாவில் இருந்து அதிக டீசல் இறக்குமதி செய்யும் ஐரோப்பிய நாடுகள்!நேபாளத்தில் 5,000 போ் நிலை என்ன? உடல்களை அடையாளம் காணும் பணியில் சவால்!!

மனுசி படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்க மறுப்பு?

வெற்றி மாறன் - ஆண்ட்ரியா கூட்டணியில் உருவான படத்திற்கு புதிய சிக்கல்...

Published On :3 ஜூன் 2025, 1:17 pm IST

வெற்றி மாறன் தயாரிப்பில் நடிகை ஆண்ட்ரியா நடித்த மனுசி திரைப்படத்திற்குத் தணிக்கை வாரியம் சென்சார் சான்றிதழ் வழங்க மறுப்பு தெரிவித்துள்ளதாம்.

இயக்குநர் கோபி நயினார் இயக்கத்தில் நடிகை ஆண்ட்ரியா நடித்த அதிகாரத்திற்கு எதிரான அரசியல் திரைப்படமான மனுசி படத்தை வெற்றி மாறனின் கிராஸ் ரூட் நிறுவனம் தயாரித்திருந்தது.

இப்படத்தின் டீசர் காட்சிகளிலேயே ஆண்ட்ரியாவின் கதாபாத்திரம் பேசுபொருளானது.

இந்த நிலையில், சென்சார் சான்றிதழ் பெற இப்படத்தை தணிக்கை வாரியத்திடம் சமர்பித்து நீண்ட நாள்கள் ஆகியும் படத்திற்கு சான்றிதழ் வழங்க வாரியத்தினர் மறுப்பு தெரிவித்து வருகின்றனராம்.

Story image

காரணம், படத்தில் இடம்பெற்ற பல காட்சிகளில் இடதுசாரிய அரசியல் வசனங்கள் குழப்பத்தை ஏற்படுத்துவதுபோல அமைந்திருப்பதால் படம் வெளியாகி சர்ச்சைகளை உருவாக்கலாம் என்பதற்காகத் தணிக்கை வாரியம் சான்றிதழ் வழங்காமல் இழுத்தடிப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதே நிலைமை நீடித்தால் இயக்குநர் வெற்றி மாறன் பத்திரிகையாளர்களைச் சந்தித்து தணிக்கை வாரியம் குறித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.