நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியானது! 11.21 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி!வா்த்தக ஒப்பந்தம்! பிரிட்டனுக்கு ஏற்றுமதியான தங்கம், வெள்ளி, வைர நகைகள்!பழனி கோயில் நில மோசடி வழக்கு! முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது சிபி-சிஐடிபயன்பாட்டுக்கு வந்தது ஐஆர்சிடிசி பீட்டா பதிப்பு! எப்படி அணுகுவது?வினாத்தாள் கசிவு முதல் ராமர் கோயில் வரை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்! கார்கே முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!
/

மனுசி படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்க மறுப்பு?

வெற்றி மாறன் - ஆண்ட்ரியா கூட்டணியில் உருவான படத்திற்கு புதிய சிக்கல்...

News image
Updated On :3 ஜூன் 2025, 1:17 pm IST

வெற்றி மாறன் தயாரிப்பில் நடிகை ஆண்ட்ரியா நடித்த மனுசி திரைப்படத்திற்குத் தணிக்கை வாரியம் சென்சார் சான்றிதழ் வழங்க மறுப்பு தெரிவித்துள்ளதாம்.

இயக்குநர் கோபி நயினார் இயக்கத்தில் நடிகை ஆண்ட்ரியா நடித்த அதிகாரத்திற்கு எதிரான அரசியல் திரைப்படமான மனுசி படத்தை வெற்றி மாறனின் கிராஸ் ரூட் நிறுவனம் தயாரித்திருந்தது.

இப்படத்தின் டீசர் காட்சிகளிலேயே ஆண்ட்ரியாவின் கதாபாத்திரம் பேசுபொருளானது.

இந்த நிலையில், சென்சார் சான்றிதழ் பெற இப்படத்தை தணிக்கை வாரியத்திடம் சமர்பித்து நீண்ட நாள்கள் ஆகியும் படத்திற்கு சான்றிதழ் வழங்க வாரியத்தினர் மறுப்பு தெரிவித்து வருகின்றனராம்.

Story image

காரணம், படத்தில் இடம்பெற்ற பல காட்சிகளில் இடதுசாரிய அரசியல் வசனங்கள் குழப்பத்தை ஏற்படுத்துவதுபோல அமைந்திருப்பதால் படம் வெளியாகி சர்ச்சைகளை உருவாக்கலாம் என்பதற்காகத் தணிக்கை வாரியம் சான்றிதழ் வழங்காமல் இழுத்தடிப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதே நிலைமை நீடித்தால் இயக்குநர் வெற்றி மாறன் பத்திரிகையாளர்களைச் சந்தித்து தணிக்கை வாரியம் குறித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.